முதலமைச்சர் கோப்பைக்கான பளுதூக்கும் போட்டி: தங்கம், வெள்ளி பதக்கங்கள் வென்ற கோவில்பட்டி வீரர்கள்

ப.செண்பகராஜ் , க.சுபாஸ்
தமிழ்நாட்டின் உள்ளூர் வீரர்களை உலக அளவில் கொண்டு செல்லும் முயற்சியாக முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் மாவட்ட, மண்டல அளவில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
கடந்த அக்டோபர் 4-ம் தேதி முதல் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. தடகளம், கால்பந்து, டேபிள் டென்னிஸ், சிலம்பம், குத்துச்சண்டை, ஆக்கி, கபடி உள்ளிட்ட 25 வகையான விளையாட்டு போட்டிகள் கடந்த 20 நாட்களுக்கு மேலாக நடைபெற்றது
முதலமைச்சர் கோப்பைக்கான பளுதூக்கும் போட்டியில்., கோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்தை சேர்ந்த பளுதூக்கும் வீரர்கள் 2 தங்க பதக்கம் மற்றும் 1 வெண்கல பதக்கம் என மூன்று பதங்கங்களை வென்று அசத்தி உள்ளனர்.
ப.செண்பகராஜ் என்ற வீரர் பளுதூக்கும் போட்டியில், 69 கிலோ ஸ்னெட்ச் (Snalch) பிரிவில் 114 கிலோ எடையும்., கிளின் அண்ட் ஜெர்க் (Clean and Jerk) பிரிவில் 152 கிலோ எடையும்., மொத்தம் 266 கிலோ எடையை தூக்கி., தங்க பதக்கம், மற்றும் ரூ1 லட்சம் பரிசு தொகை வென்றுள்ளார்.
க.சுபாஸ் என்ற வீரர் 49 கிலோ ஸ்னெட்ச் (Snalch) பிரிவில் 73 கிலோ எடையும்., கிளின் அண்ட் ஜெர்க் (Clean and Jerk) பிரிவில் 86 கிலோ எடையும்., மொத்தம் 159 கிலோ எடையை தூக்கி ஒரு தங்க பதக்கம் ரூ. 1 லட்சம் பரிசு தொகையும் வென்றுள்ளார்.
அதே எடை பிரிவில் ப.கபிஷ் ஸ்னெட்ச் (Snalch ) பிரிவில் 65 கிலோ எடையும்.,கிளின் அண்ட் ஜெர்க் (Clean and Jerk) பிரிவில் 88 கிலோ எடையும்., மொத்தம் 153 கிலோ தூக்கி எடையை தூக்கி ரூபாய் 50,000 பரிசு தொகையும். வெண்கல பதக்கமும் வென்றுள்ளார். கோவில்பட்டிக்கு பெருமை சேர்த்துள்ள இவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
