கோவில்பட்டி ராஜீவ் நகர் பகுதியில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ராஜீவ் நகர் பகுதியில் நின்று கொண்டிருந்த வாகனத்தை சோதனையிட்ட போது 50 கிலோ எடை கொண்ட 40 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வாகனத்தில் இருந்த கோவில்பட்டி ஊரணி தெருவை சேர்ந்த முத்து மாரியப்பன் மற்றும் சிவசங்கர் ஆகிய இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அப்பகுதியில் பொதுமக்களிடமிருந்து […]
கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட மறவன் காலனி, தாமஸ் நகர் பகுதி மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடந்தது. கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்துக்கு கிளை செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார்.. மாவட்ட செயலாளர் கரும்பன், நகரச் செயலாளர் சரோஜா, தாலுகாச் செயலாளர் பாபு ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். போராட்டத்தில், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சேதுராமலிங்கம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பரமராஜ், ரஞ்சனிகண்ணம்மா, இளைஞர் […]
தூத்துக்குடி மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் வழிகாட்டுதலின் படி விளாத்திகுளம் ஸ்ரீ அம்பாள் வித்யாலயா கால்பந்து மைதானத்தில் நடைபெற்றது. இம்முகாமினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன் விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் துவக்கி வைத்து வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடினர். தூத்துக்குடி மாவட்ட […]
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவிற்கு உட்பட்ட குறிப்பன்குளத்தில் ஒரு பட்டாசு ஆலையில் ஆகஸ்ட் மாதம் 31-ந்தேதி வெடி விபத்து ஏற்பட்டது . இதில், அரசர்குளத்தை சேர்ந்த முத்துகண்ணன் (வயது 21), விஜய் (25) ஆகியோர் பலியாகினார். புளியங்குளத்தை சேர்ந்த செல்வம் (26), ஆழ்வார்திருநகரி அருகே உள்ள செம்பூரை சேர்ந்த சுந்தரம் மகன் ஐசக் பிரசாந்த் (26), சின்னமதிகூடலை சேர்ந்த செந்தூர்கனி, முத்துமாரி ஆகியோர் காயமடைந்தனர். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஐசக் பிரசாந்த், செல்வம் ஆகியோர் […]
கோவில்பட்டி மெயின் ரோட்டில் காமராஜர் சிலைக்கு எதிர்புறம் நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட இடத்தில் மீனாட்சி அம்மன் -சுந்தரேஸ்வரர் கோவில் நிர்மாண பணிகள் நடைபெற்று வருகின்றன.. இந்த நிலையில் கோவிலில் நூதன கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. வருகிற 16-ம் தேதி திங்கட்கிழமை காலை 9. 15 மணிக்கு க்கு மேல் 10. 15 மணிக்குள் கொடிமரம் பிரதிஷ்டை விழா நடக்கிறது. கொடிமர பிரதிஷ்டை பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்கள், கொடிமரத்தின் கீழ் தங்கம், கலப்படமில்லாத வெள்ளி பொருட்களை […]
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்), தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் அமைந்துள்ள மகாகவி பாரதியார் பிறந்த இல்லத்திலுள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பாரதியாரின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டுள்ள வரலாற்று புகைப்படங்கள் மற்றும் மகாகவி பாரதியார் பயன்படுத்திய பொருட்களைப் பார்வையிட்டார். மேலும், பாரதியார் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த பார்வையாளர்கள் பதிவேட்டில் தனது குறிப்புகளைப் பதிவு செய்தார். அதனைத்தொடர்ந்து, கோவில்பட்டியில் அமைந்துள்ள கரிசல்காட்டு இலக்கியத்தின் முன்னோடி எழுத்தாளர் கி.ராஜநாராயணன் நினைவரங்கத்தில் உள்ள அன்னாரது […]
நாகை மாவட்டத்திற்கு உள்பட்ட செருதூர் பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சில நாட்களுக்கு முன்பாக அடுத்தடுத்து இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கப்பட்டு தங்களது மீன்பிடி உபகரணப் பொருள்களை பறிகொடுத்தனர். இந்த சூழலில், நேற்று முன்தினம் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த செருதூர் பகுதி மீனவர்களின் பைபர் படகு மீது இலங்கை கடற்படை கப்பல் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 மீனவர்கள் கடலில் தத்தளித்தனர். பின்னர் சக மீனவர்களின் உதவியோடு கரை திரும்பிய 4 மீனவர்களும் ஒரத்தூர் அரசு […]
தமிழ்நாடு செய்தி, மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;- “2030-ஆம் ஆண்டிற்குள், தமிழ்நாட்டை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றிட வேண்டும் என்று உயரிய இலக்கை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிர்ணயித்து, அந்த இலக்கை அடைவதற்கான அனைத்து முன்னெடுப்புகளையும் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டிற்கு அதிக அளவிலான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் அமெரிக்காவில் அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகிறார்.இப்பயணத்தின் போது, தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் […]
மதுரை பெண்கள் விடுதியின் முதல் மாடியில் வைக்கப்பட்டிருந்த பிரிட்ஜ் நேற்று அதிகாலை வெடித்துச்சிதறி தீ விபத்து ஏற்பட்டது. இதில் அளவுக்கு அதிகமான கரும்பு புகை வெளியேறியதால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அப்போது முதல் மாடியில் இருந்து இரண்டாவது மாடிக்கு புகை பரவுவதை தடுக்க அங்கிருந்தவர்கள் கதவை பூட்டினர். 2-வது மாடியில் தங்கியிருந்தவர்கள் கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு சென்று உயிர் பிழைத்தனர். இதற்கிடையே விபத்து ஏற்பட்ட பகுதியில் தங்கியிருந்த ஆசிரியை பரிமளா சவுந்தரி சுதாரித்துக்கொண்டு அந்த அறையில் தூக்கத்தில் […]
மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே கட்ராபாளையம் பகுதியில் உள்ள தனியார் மகளிர் விடுதி செயல்பட்டு வருகிறது.இந்த விடுதியில் வெளியூர்களில் இருந்து மதுரை வந்து வேலை பார்க்கும் பெண்கள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள் தங்கி உள்ளனர். இன்று i அதிகாலை 4 மணியளவில் விடுதியில் உள்ள குளிர்சாதன பெட்டி திடீரென வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. தீ விபத்து காரணமாக கரும்புகை உருவானதால் விடுதியில் இருந்த பெண்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. தீவிபத்து குறித்து அறிந்து விரைந்து […]