வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் செயல்பாடுகள் விழிப்புணர்வு முகாம்

தூத்துக்குடி மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் வழிகாட்டுதலின் படி விளாத்திகுளம் ஸ்ரீ அம்பாள் வித்யாலயா கால்பந்து மைதானத்தில் நடைபெற்றது.
இம்முகாமினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன் விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் துவக்கி வைத்து வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடினர்.
தூத்துக்குடி மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறை செயற்பொறியாளர் (வே.பொ.) பா. கிளாட்வின் இஸ்ரேல் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு குறித்து அதன் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார்.
இம்முகாமில் வேளாண்மைப் பொறியியல் துறை உதவி செயற் பொறியாளர்கள் சங்கரநாராயணன், முருகன், செவ்வேள்,உதவிப் பொறியாளர்கள், வேளாண்மைத் துறை துணை இயக்குநர் (மாநிலத் திட்டம்), வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறையைச் சார்ந்த அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
