• June 8, 2025

நாகை மீனவர்கள் படகில்  மோதிய இலங்கை கடற்படை கப்பல்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

 நாகை மீனவர்கள் படகில்  மோதிய இலங்கை கடற்படை கப்பல்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

நாகை மாவட்டத்திற்கு உள்பட்ட செருதூர் பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சில நாட்களுக்கு முன்பாக அடுத்தடுத்து இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கப்பட்டு தங்களது மீன்பிடி உபகரணப் பொருள்களை பறிகொடுத்தனர்.

இந்த சூழலில், நேற்று முன்தினம் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த செருதூர் பகுதி மீனவர்களின் பைபர் படகு மீது இலங்கை கடற்படை கப்பல் மோதி ஏற்பட்ட விபத்தில் 4  மீனவர்கள் கடலில் தத்தளித்தனர். பின்னர் சக மீனவர்களின் உதவியோடு கரை திரும்பிய 4 மீனவர்களும் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 இலங்கை கடற்கொள்ளையர்கள் மற்றும் கடற்படையினரை கண்டித்து 2,500-க்கும் மேற்பட்ட செருதூர் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 400-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இலங்கை கடற்படையினரின் செயலை கண்டித்து அதிமுக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தந்து எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது:-

இனவெறி கொண்ட இலங்கை கடற்படை தமிழக மீனவர்களின் படகு மீது மோதி நடுக்கடலில் மீனவர்களை தத்தளிக்க விட்டுள்ளனர்! மானமில்லாமல் மன்னராட்சிப் போல் மகன் கையில் தமிழ்நாட்டை விளையாட்டுப் பொருளாக கொடுத்து விட்டு அமெரிக்காவில் அடைக்கலம் அடைந்துள்ள பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மீனவர் வேதனை புரியவில்லையா? தெரியவில்லையா?

பாஜக அரசு தனக்கும் தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினைகளுக்கும் சம்பந்தம் இல்லாதது போலவும் ஆந்திரா,பிகார்,குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் மட்டும் தான் இந்தியா எனவும் எண்ணி ஆட்சி செய்கிறது.

கடந்த பத்தாண்டில் இல்லாத அளவிற்கு 2024-ஆம்‌ ஆண்டில் அதிகளவு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து உள்ளனர். கடல் நடுவே மீனவர்களுக்கு கடும் துன்புறுத்தல்கள் தொடர்கதையாகி உள்ளது. இனியும்‌‌ பாஜக-திமுக அரசுகள் மவுளனம் சாதிப்பது மீனவர்களுக்கு செய்யும் பெரும் துரோகம்!

இவ்வாறு அவர் கூறி  உள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *