• June 7, 2025

Month: June 2024

கோவில்பட்டி

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்”- எட்டயபுரம் பகுதியில் ஆட்சியர் கோ.லட்சுமிபதி ஆய்வு

அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி விரைவாக மக்களை சென்றடைவதை உறுதி செய்திட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார் இதனை தொடர்ந்து எட்டயபுரம் பகுதியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி இன்று பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்தார். எட்டயபுரம் வட்டம்,கன்னக்கட்டை ஊராட்சியில் பொதுப்பணித்துறை நீர்வளம் மூலம் கல்லாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் கன்னக்கட்டை தடுப்பணையை […]

செய்திகள்

சென்னையில் ராகுல்காந்தி பிறந்தநாள், `கேக்’ வெட்டி கொண்டாட்டம்

சென்னை சத்தியமூர்த்தி பவனில் ராகுல்காந்தி எம்.பி.யின் 54 வது பிறந்த தின விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை கேக் வெட்டினார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு, திருநாவுக்கரசர் விஜய்வசந்த் எம்.பி, ஜே.எம்.ஹாரூண், துணைத்தலைவர்கள் சொர்ணாசேதுராமன், இதயத்துல்லா, டி.செல்வம், பி.வி.தமிழ்ச்செல்வன், எஸ்.கே.அகமதுஅலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி

மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கிய கனிமொழி

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 64 மாணவர்களை கனிமொழி எம்,பி.இன்று நேரில் அழைத்து  நேரில் அழைத்துப் பாராட்டி, கல்வி ஊக்கத்தொகை  வழங்கினார். முதல் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரம், இரண்டாவது அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு ரூ.15 ஆயிரம், மூன்றாவதாக அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் ரூபாய் மற்றும் புத்தகப் பைகளை  கனிமொழி எம்.பி […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம் 23-ந்தேதி நடக்கிறது

கோவில்பட்டி   1974-1977 ம் ஆண்டு நாடார் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமன இணைந்து   ஒவ்வொரு மாதமும்   நான்காவது  ஞாயிறு அன்று இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தி வருகிறது. இந்த இந்த மாதத்தின் நான்காவது  ஞாயிற்றுக்கிழமை யான 23 ம் தேதி கோவில் பட்டி   ஆழ்வார் தெருவில் உள்ள செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடக்கிறது. காலை   9 மணி முதல்   மதியம்   2 மணிவரை […]

தூத்துக்குடி

10 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவிகளுக்கு அஞ்சல் சேமிப்பு கணக்கு தொடங்க திட்டம்

தூத்துக்குடி அஞ்சல்துறை முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் சு.முனிகிருஷ்ணன் கூறியதாவது: இந்திய அஞ்சல்துறை மற்றும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு புதிய அஞ்சல் சேமிப்பு கணக்குகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.  அதன்படி,  10 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு அஞ்சல் சேமிப்பு கணக்குகள், பூஜ்ஜிய இருப்புத் தொகை (Zero Balance Account) வசதியுடன் தொடங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.  10 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு […]

கோவில்பட்டி

ரேஷன் கடையில் பொருட்கள் எடை குறைவு புகார்: சமாதான கூட்டத்தை தொடர்ந்து இந்திய

கோவில்பட்டி வட்டம் இளையரசனேந்தல் கிராமத்தில் உள்ள ரேஷன்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, சீனி, கோதுமை போன்ற பொருட்கள் எடைகுறைவாக இருப்பது,பொதுமக்களை அவதூறாக பேசுவது ஆகியவற்றை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று 19-ம்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.. இதுதொடர்பான சமாதானகூட்டம் நேற்று  மாலை கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது. வட்டாட்சியர் சரவணபெருமாள் தலைமை தாங்கினார். வட்டவழங்கல்அலுவலர் பாண்டியராஜன், இந்தியகம்யூனிஸ்ட் தாலுகாசெயலாளர் பாபு,மாவட்டக்குழு உறுப்பினர்கள் சேதுராமலிங்கம், ரஞ்சனி, கண்ணம்மா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில்,இளையரசனேந்தல் […]

கோவில்பட்டி

மனு அளித்து ஓராண்டு ஆகியும் நடவடிக்கை இல்லை”-ஜமாபந்தி அதிகாரிகளை கண்டித்து த. மா.கா.

கோவில்பட்டி நகராட்சி வார்டு எண் 23, 24க்கு உட்பட்ட கடலையூர் ரோடு , வள்ளுவர் நகர் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கப்படாமல் உள்ளது.  கடந்த 2017-ம் ஆண்டு வள்ளுவர் நகர் பகுதியில் சர்வே எண் 513-ல் அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பதில் ஒரு சில நபர்களுக்குள் ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு அப்போதைய வட்டாட்சியரால், சர்வே எண் 513 முழுவதும் நிலங்களை […]

கோவில்பட்டி

கள்ளச் சந்தையில் சீன லைட்டர்கள் விற்பனையை தடுக்க வேண்டும்’ -கனிமொழி எம். பி.

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர்  கனிமொழி யை தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகள்  இன்று நேரில் சந்தித்தனர். கோவில்பட்டி நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் மா. பரமசிவம், துணைத்தலைவர் கோபால்சாமி, செயலாளர்  வி எஸ் சேதுரத்தினம், சாத்தூர்  தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் லட்சுமணன், உறுப்பினர் குருசாமி,ஆல் இந்தியா மேட்ச் சேம்பர் சிவகாசி தலைவர் விஜய் ஆனந்த், செயலாளர் பிலால் மேச் நூர் முகமது, பொருளாளர் நாகராஜன், மெழுகு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் டேவிட், […]

செய்திகள்

தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயங்க அனுமதி இல்லை

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயங்க அனுமதி இல்லை. அரசின் எச்சரிக்கையை மீறி இயக்கப்பட்டும் ஆம்னி பஸ்கள் இனி முடக்கப்படும். விதிமுறைகளை மீறி இயங்கும் ஆம்னி பஸ்களால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.34.56 கோடி இழப்பு ஏற்படுகிறது. எனவே சட்டத்திற்கு புறம்பாக இயக்கப்படும் ஆம்னி பஸ்களின் இயக்கத்தை இனியும் அனுமதிக்க இயலாது. விதிமுறைகளை மீறி இயக்கப்படும் பிறமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்களில் பொதுமக்கள் முன்பதிவு […]

செய்திகள்

பாளையங்கோட்டை மாநகராட்சி பள்ளியில் `கோள்கள் திருவிழா’

தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் தமிழகம் முழுவதும் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை 2024 இடங்களில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் வானியல் கருத்துக்களை பரப்பிட கோள்கள் திருவிழாவை முன்னெடுத்து  நடத்தி வருகிறது. பாளையங்கோட்டை மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் நடந்த கோள்கள் திருவிழாவில் தொலைதூர பொருட்களை டெலஸ்கோப்பில் பார்வையிடுவது குறித்தும்,கோள்கள் குறித்த விழிப்புணர்வு அட்டைகளை மாணவரிடம் வழங்கி வானியல் கருத்துக்களை தெரிந்திடவும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை முத்துலட்சுமி தலைமை தாங்கினார். […]