மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கிய கனிமொழி

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 64 மாணவர்களை கனிமொழி எம்,பி.இன்று நேரில் அழைத்து நேரில் அழைத்துப் பாராட்டி, கல்வி ஊக்கத்தொகை வழங்கினார்.
முதல் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரம், இரண்டாவது அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு ரூ.15 ஆயிரம், மூன்றாவதாக அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் ரூபாய் மற்றும் புத்தகப் பைகளை கனிமொழி எம்.பி வழங்கினார். அப்போது தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உடனிருந்தார்.
