பாளையங்கோட்டை மாநகராட்சி பள்ளியில் `கோள்கள் திருவிழா’

தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் தமிழகம் முழுவதும் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை 2024 இடங்களில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் வானியல் கருத்துக்களை பரப்பிட கோள்கள் திருவிழாவை முன்னெடுத்து நடத்தி வருகிறது.
பாளையங்கோட்டை மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் நடந்த கோள்கள் திருவிழாவில் தொலைதூர பொருட்களை டெலஸ்கோப்பில் பார்வையிடுவது குறித்தும்,கோள்கள் குறித்த விழிப்புணர்வு அட்டைகளை மாணவரிடம் வழங்கி வானியல் கருத்துக்களை தெரிந்திடவும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை முத்துலட்சுமி தலைமை தாங்கினார். கோவில்பட்டி அஸ்ட்ரோ கிளப் ஒருங்கிணைப்பாளர் முத்துமுருகன்,பள்ளி ஆசிரியை சைலஜா குமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துச்சாமி கலந்துகொண்டு மாணவர்களுக்கு வானியல் குறித்து பயிற்சி அளித்தார்.
இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு வானியல் பயிற்சி பெற்றனர். கோள்கள் திருவிழாவின் நிறைவுவிழா கோயம்புத்தூரில் ஜூன் 22, 23 தேதிகளில் நடக்கிறது.
