• June 8, 2025

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்”- எட்டயபுரம் பகுதியில் ஆட்சியர் கோ.லட்சுமிபதி ஆய்வு

 “உங்களைத் தேடி உங்கள் ஊரில்”- எட்டயபுரம் பகுதியில் ஆட்சியர் கோ.லட்சுமிபதி ஆய்வு

அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி விரைவாக மக்களை சென்றடைவதை உறுதி செய்திட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்

இதனை தொடர்ந்து எட்டயபுரம் பகுதியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி இன்று பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்தார்.

எட்டயபுரம் வட்டம்,கன்னக்கட்டை ஊராட்சியில் பொதுப்பணித்துறை நீர்வளம் மூலம் கல்லாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் கன்னக்கட்டை தடுப்பணையை ஆட்சியர் கோ.லட்சுமிபதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கீழஈரால் கிராமத்தில் வெள்ளத்தால் இடிந்து விழுந்த வீட்டினை தற்போது ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர்  கோ.லட்சுமிபதி பார்வையிட்டார்.

பின்னர் எட்டயபுரம் பாரதியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள மாதிரி பள்ளியில் போதை பொருட்களுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள மாணவர் காவலர் படையினருடன் உரையாடினார்.

எட்டயபுரம் பாரதியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை பார்வையிட்டு மாணவிகளுடன் கலந்துரையாடினார். ,மாணவிகளுக்கு வழங்கப்படும் சத்துணவினை பார்வையிட்டு அதன் தரம் குறித்த ஆய்வு செய்தார்.

எட்டயபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளியில் நடந்த போதைப் பொருள் மற்றும் புகையிலைக்கு எதிரான விழிப்புணர்வு முகாமில் ஆட்சியர்  .கோ.லட்சுமிபதி பங்கேற்று பேசினார்..

கீழஈரால் ஊராட்சி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்ட ஆட்சியர், புற நோயாளிகள் பிரிவில்  ஆய்வு மேற்கொண்டார்.

ஆட்சியரின் சுற்றுப்பயணத்தில் துணை ஆட்சியர் ஐஸ்வர்யா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *