• June 8, 2025

கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் திடீர் சோதனை‌

 கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் திடீர் சோதனை‌

கோவில்பட்டி கடலையூர் ரோட்டில் வட்டார போக்குவரத்து அலுவலர் அலுவலகம் உள்ளது. இன்று காலை லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு பீட்டர்பால் தலைமையில் 12 பேர் அடங்கிய குழுவினர் திடீரென வந்தனர்,

அவர்கள் லுங்கி சட்டை மற்றும் சாதாரண உடை அணிந்து வந்து இருந்தனர். வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் தங்களை அறிமுகம் செய்து கொண்ட லஞ்ச ஒழிப்பு துறையினர்  அலுவலகம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

போக்குவரத்து ஆய்வாளர்கள் மற்றும் அங்கிருந்த டிரைவிங் பள்ளி உரிமையாளர்கள் உள்ளிட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அலுவலகத்தில் இருந்து பணம் கைப்பற்றப்பட்டது. அவற்றுக்கான முறையான ஆதாரங்கள்  உள்ளனவா என்று ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

வட்டார போக்குவரத்து அலுவலர் அலுவலகத்தில் முறைகேடுகள் நடப்பதாக வந்த புகார் தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தெரிவித்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *