• June 7, 2025

Month: June 2024

கோவில்பட்டி

கோவில்பட்டி காளியம்மன் கோவில் வருடாபிஷேக விழா

கோவில்பட்டி அருள்மிகு காட்சி கொடுத்த காளியம்மன் கோவில் வருடாபிஷேக விழா இன்று நடைபெற்றது. காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் காளியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்ப அபிஷேகம் நடத்தப்பட்டது. முன்னதாக யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர், பகல் 11.30 மணியளவில் பத்திரகாளி அம்மன் கோவில் எதிர்புறம் உள்ள பொன்னம்பல நாடார் கலையரங்கத்தில் மகா அன்னதானம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு நாடார் மொத்த […]

செய்திகள்

கள்ளச்சாராயத்தால் பெற்றோர்களை இழந்த 3 குழந்தைகளின் கல்வி செலவை அதிமுக ஏற்கும் –

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் பலியானவர்கள் குடும்பங்களை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும். அவருக்கு ஆட்சி, அதிகாரம் மட்டுமே முக்கியம். மக்கள் மீது அக்கறை இல்லை. சென்னையில் இருந்து மருத்துவர்களை அழைத்து வந்து சிகிச்சையளித்து இருந்தால் பலரின் உயிரை […]

கோவில்பட்டி

சர்வதேச யோகா தின `லோகோ’ வடிவில் நின்று அசத்திய மாணவிகள்

நாடு முழுவதும் ஜூன் 21ம் தேதி உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு யோகாவின் அவசியத்தை வலியுறுத்தி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது.இதையொட்டி  இன்று  கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் யோகா வடிவில் நின்று யோகாவின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு  ஏற்படுத்தினர்.மாணவிகள் யோகா தின இலச்சினை (லோகோ) வடிவில் நின்று  அசத்தினர். பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா,பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் முத்து முருகன்,தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன்,உடற் கல்வி இயக்குனர் காளிராஜ் ஆசிரியர்கள், மாணவிகள் பலர் […]

செய்திகள்

கள்ளச்சாராய சாவு சம்பவம் தொடர்பாக  திரைத்துறையினரிடம் இருந்து எந்த குரலும் வரவில்லை! டி.ஜெயக்குமார்

அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறி இருப்பதாவது:- கள்ளச்சாராயத்தால் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மருத்துவமனையின் தூண்களிலும், சாலைகளிலும் கதறி கொண்டிருக்கும் காட்சிகள்  கண்களை கலங்க வைக்கிறது. இத்தனைக்கு பிறகும் திரைத்துறையை சேர்ந்தவர்களிடம் இருந்து ஒரு குரலும் வரவில்லை.  நடிகர் விஜய் மட்டும் தனக்கு வாய்ப்பளித்து வளர்த்து விட்ட தமிழர்களுக்கு இடர் நேரங்களில் துணை நிற்க வேண்டும் என  உணர்ந்து குரல் கொடுத்துள்ளார். மீதமுள்ளவர்கள் யாரை கண்டு அஞ்சுகின்றனர் ? […]

செய்திகள்

கள்ளச்சாராய பலி சம்பவம்: அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது- விஜய் கருத்து

தமிழக வெற்றிக்கழக கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய், தனது எக்ஸ் பக்கத்தில் கூறி இருப்பதாவது:- `கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் […]

செய்திகள்

விஷ சாராய சாவு பற்றி விசாரணை நடத்த தனி நீதிபதி நியமனம்- பலியானோர்

முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-  கள்ளக்குறிச்சி வட்டம், கருணாபுரம் காலனியில் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால் 35 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன். இந்த சம்பவத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளித்திட அறிவுறுத்தியுள்ளதோடு, பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து, ஆறுதல் தெரிவிக்க நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை அனுப்பி […]

தூத்துக்குடி

குரூப்-1 அரசு காலி பணியிடங்களுக்கான மாதிரி தேர்வுகள் நடக்கும் தேதிகள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-1   பணிக்காலியிடங்களுக்கு 90)   13.7.2024  அன்று தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு மாநில அளவிலான  4  மாதிரி  தேர்வுகள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.  தூத்துக்குடி,  மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக  இலவச நேரடி  மாதிரிதேர்வுகள் 24.6.2024,27.6.2024,2.7.2024  மற்றும்  5.7.2024   ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.  1-வது  &

செய்திகள்

பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்த டாக்டர்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்தவர் டாக்டர் சுரேஷ் ஹெர்பெர்ட் (வயது 53).இவர் திண்டுக்கல்  ராஜக்காபட்டியில்  வடமலையான் மருத்துவமனையில் சில மாதங்களாக பணிபுரிந்து வந்தார்.  இவர் அதே பகுதியில் ராஜா என்பவருக்கு சொந்தமான வீட்டில் கடந்த 8 மாதமாக வாடகைக்கு குடியிருந்து வந்தார். இவர் மனைவியை பிரிந்து தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று டாக்டர்  சுரேஷ் தங்கியிருந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தாடிக்கொம்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் […]

செய்திகள்

கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு; கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் இடமாற்றம்-

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் ஒருவர் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். பல முறை சிறை சென்றுள்ள இவர் மீண்டும் மீண்டும் கள்ளச்சாராய விற்பனையை தொடர்ந்து நடத்தி வந்தார். மதுபானங்கள் விலை அதிகம் என்பதால், கருணாபுரம் பகுதியை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் கள்ளச்சாராயத்தை தேடி வந்து குடிக்க தொடங்கினார்கள் இந்த நிலையில் அப்பகுதியில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்து பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். கடுமையான தலைவலி, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்ட நிலையில் 80 பேர் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் திடீர் சோதனை‌

கோவில்பட்டி கடலையூர் ரோட்டில் வட்டார போக்குவரத்து அலுவலர் அலுவலகம் உள்ளது. இன்று காலை லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு பீட்டர்பால் தலைமையில் 12 பேர் அடங்கிய குழுவினர் திடீரென வந்தனர், அவர்கள் லுங்கி சட்டை மற்றும் சாதாரண உடை அணிந்து வந்து இருந்தனர். வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் தங்களை அறிமுகம் செய்து கொண்ட லஞ்ச ஒழிப்பு துறையினர்  அலுவலகம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தினார்கள். போக்குவரத்து ஆய்வாளர்கள் மற்றும் அங்கிருந்த டிரைவிங் பள்ளி உரிமையாளர்கள் […]