குரூப்-1 அரசு காலி பணியிடங்களுக்கான மாதிரி தேர்வுகள் நடக்கும் தேதிகள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-1 பணிக்காலியிடங்களுக்கு 90) 13.7.2024 அன்று தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு மாநில அளவிலான 4 மாதிரி தேர்வுகள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக இலவச நேரடி மாதிரிதேர்வுகள் 24.6.2024,27.6.2024,2.7.2024 மற்றும் 5.7.2024 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. 1-வது மாதிாி தேர்வு 24.6.2024 (திங்கள்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த மாதிரிதேர்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ள போட்டித் தேர்வர்கள் இந்த ஆன்லைன் படிவத்தை 22.6.2024 – க்குள் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறாா்கள்.
Registration Google form:👇🏻
https://forms.gle/AQe48HBnDtYyFtUG8
தேர்வு நடைபெறும் இடம்:
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோரம்பள்ளம், தூத்துக்குடி
இதில் தன்னார்வப் பயிலும் வட்ட (Study Circle) மாணவர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த போட்டித்தேர்வு ஆர்வலர்கள் (Aspirants) அனைவரும் மேற்காணும் கூகுள் லிங்க் வாயிலாக பதிவு செய்து கலந்து கொள்ளலாம்.
தேர்வின் சிறப்பம்சம்:-
*மாநில அளவிலான தரவரிசை
*OMR – மதிப்பீடு
* PDF – விடை குறிப்புகள்
* Qtns – கலந்துரையாடல் நடைபெறும்.
இந்த 4 – முழு மாதிரித் தேர்வுகள் உங்களது தயாரிப்புகளை செம்மைப்படுத்தும் என்று நம்புகிறோம்.
மேற்கண்ட தகவல்கள் தூத்துக்குடி வேலைவாய்ப்பு அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
