சர்வதேச யோகா தின `லோகோ’ வடிவில் நின்று அசத்திய மாணவிகள்

நாடு முழுவதும் ஜூன் 21ம் தேதி உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு யோகாவின் அவசியத்தை வலியுறுத்தி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி இன்று கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் யோகா வடிவில் நின்று யோகாவின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மாணவிகள் யோகா தின இலச்சினை (லோகோ) வடிவில் நின்று அசத்தினர்.
பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா,பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் முத்து முருகன்,தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன்,உடற் கல்வி இயக்குனர் காளிராஜ் ஆசிரியர்கள், மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
