• June 8, 2025

கள்ளச்சாராய சாவு சம்பவம் தொடர்பாக  திரைத்துறையினரிடம் இருந்து எந்த குரலும் வரவில்லை! டி.ஜெயக்குமார் கண்டனம்  

 கள்ளச்சாராய சாவு சம்பவம் தொடர்பாக  திரைத்துறையினரிடம் இருந்து எந்த குரலும் வரவில்லை! டி.ஜெயக்குமார் கண்டனம்  

அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

கள்ளச்சாராயத்தால் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மருத்துவமனையின் தூண்களிலும், சாலைகளிலும் கதறி கொண்டிருக்கும் காட்சிகள்  கண்களை கலங்க வைக்கிறது. இத்தனைக்கு பிறகும் திரைத்துறையை சேர்ந்தவர்களிடம் இருந்து ஒரு குரலும் வரவில்லை.

 நடிகர் விஜய் மட்டும் தனக்கு வாய்ப்பளித்து வளர்த்து விட்ட தமிழர்களுக்கு இடர் நேரங்களில் துணை நிற்க வேண்டும் என  உணர்ந்து குரல் கொடுத்துள்ளார். மீதமுள்ளவர்கள் யாரை கண்டு அஞ்சுகின்றனர் ?

ஏழை, எளிய மக்கள் 200 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்குவதால்தான் நீங்கள் 100 கோடி ,200 கோடி வரை சம்பளம் வாங்குகிறீர்கள். அந்த மக்களுக்கு இதுபோன்ற நேரங்களில் ஆதரவை கொடுக்க வேண்டிய சமூக  பொறுப்பு உங்கள் அனைவருக்கும் கட்டாயம் இருக்கிறது. மானத்தமிழன் மாண்டுபோவதை வேடிக்கை பார்க்கும் திரைத்துறையை சேர்ந்தவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

இவ்வாறு டி.ஜெயக்குமார் கூறி உள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *