கோவில்பட்டி காளியம்மன் கோவில் வருடாபிஷேக விழா



கோவில்பட்டி அருள்மிகு காட்சி கொடுத்த காளியம்மன் கோவில் வருடாபிஷேக விழா இன்று நடைபெற்றது.
காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் காளியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்ப அபிஷேகம் நடத்தப்பட்டது. முன்னதாக யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன,
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர், பகல் 11.30 மணியளவில் பத்திரகாளி அம்மன் கோவில் எதிர்புறம் உள்ள பொன்னம்பல நாடார் கலையரங்கத்தில் மகா அன்னதானம் நடைபெற்றது.
இரவு 7 மணிக்கு நாடார் மொத்த வியாபாரிகள் மண்டகப்படிதாரர் சார்பில் வெள்ளி சிம்ம வாகனத்தில் வெள்ளி குடையின் கீழ் காளியம்மன் எழுந்தருளி வீதி உலா நடைபெற இருக்கிறது.
