தூத்துக்குடி அருகே உள்ள தெற்கு வீரபாண்டியபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் கோள்கள் திருவிழா நடந்தது. இதில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வானில் கோள்களை காண்பது குறித்தும்,இன்றைய சூழ்நிலையில் வானியல் அதிசயங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மாணவர்கள் அனைவருக்கும் கோள்கள் பற்றிய விழிப்புணர்வு தொகுப்பு அட்டைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை இமாகுலேட் குளோரியா தலைமை தாங்கினார். இடைநிலை ஆசிரியை சாந்தி முன்னிலை வகித்தார். கோவில்பட்டி அஸ்ட்ரோ கிளப் ஒருங்கிணைப்பாளர் […]
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தூத்துக்குடி மாவட்ட கிளை சார்பாக தூத்துக்குடி கருவூல அலுவலகம் முன்புகோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சு.செல்வராஜ் தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் மா. கலை உடையார் கோரிக்கை விளக்க உரையாற்றினார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் அண்டனி சார்லஸ் ,தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி கல்வி மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகன் வாழ்த்துரை வழங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்திலுள்ள அனைத்து […]
அரபு நாடுகளின் ஒன்றான குவைத்தில் அஹ்மதி மாகாணம் மங்காப் மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இந்தியாவை சேர்ந்த 50 பேர் உயிரிழந்தனர். இவர்களில் தமிழகத்தை சேர்ந்த 7 பேர் ஆவர்.. இதில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி கிராமத்தை சேர்ந்த வீராச்சாமி மகன் மாரியப்பன் என்பவரும் ஒருவர். குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் விமான மூலம் நேற்று மாலை கொச்சி விமான நிலையம் […]
கோவில்பட்டியில் போலீஸ் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு வலியுறுத்தல்
கோவில்பட்டியில் அதிகரித்து வரும் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தலைவர் தமிழரசன் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முற்றுகை போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி ரவிகுமார், மருதமாரியப்பன், மக்கள் நீதி மய்யம் கட்சி ராதாகிருஷ்ணன், பகுஜன் சமாஜ் கட்சி மாணிக்கராஜ் , மனித நேய மக்கள் கட்சி செண்பகராஜ், […]
மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமைகளில் மாதாந்திர தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. ஜூன் மாதத்திற்குரிய வேலைவாய்ப்பு முகாம் வருகிற 21.6.2024( வெள்ளிக்கிழமை )காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் தனியார் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டு […]
தமிழ்நாடு பள்ளிகளுக்கு இடையிலான மாணவர்களுக்கான (17 வயதுக்குட்பட்டோருக்கான) மாநில அளவிலான ஆக்கி லீக் போட்டி ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடைபெற உள்ளது அதற்கு முன்னதாக மாவட்ட அளவிலான போட்டிகளும் மண்டல அளவிலான போட்டிகளும் நடத்தப்பட உள்ளன இப் போட்டியில் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள் மட்டுமே கலந்து கொண்டு விளையாட உள்ளன. மொத்தம் 38 மாவட்டங்களில் 250 க்கு மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளன. இப் போட்டி மூலம் 4500 க்கும் மேற்பட்ட வீரர்கள் சான்றிதழ் […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சீரமைக்கப்பட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கம் திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (12/6/2024) நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கலந்துகொண்டு ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சீரமைக்கப்பட்ட மக்கள் குறைதீர்க்கும் அரங்கத்தைத் திறந்து வைத்தார். தொடர்ந்து, பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், இலவச வீட்டுமனைப் பட்டா, மின் மோட்டாருடன் கூடிய […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிதவர், இஸ்லாமியர், சீக்கியர், சமணர், பார்சியர் மற்றும் புத்த மதத்தினர் ஆகிய சிறுபான்மையினருக்கு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் தனிநபர்கடன் அதிகபட்சமாக ரூ.30லட்சம் வரையில் வழங்க்கபப்டுகிறது. கைவினை கலைஞர்களுக்கு ரூ.10. லட்சம் கடன், சுய உதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன் 15.லட்சம், கல்விக்கடன் 20. லட்சம் முதல் 30 லட்சம் வரை குறைந்த வட்டி விகிதத்தில் கூட்டுறவு வங்கிகள் […]
அரசு கல்லூரிகளில் மிருதங்கம், கரகம் உள்ளிட்ட கலைகள் பயிற்றுவிக்கும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு வாய்ப்பு
தமிழக அரசின் செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:- குரலிசை, தேவாரம், மிருதங்கம், பரதநாட்டியம். ஓவியம்,.நவீன சிற்பம், கைவினை, கிராமிய பாடல், கரகம், தப்பாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதன்படி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆண்டுக்கு 80 வகுப்புகள் நடத்தப்பட்டு தொகுப்பு ஊதியம் வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜூன் 25-ந்தேதி ஆகும். மேலும் விவரங்களுக்கு கலை பண்பாட்டு துறையின் www.artandculture.tn.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம். இவ்வாறு செய்திகுறிப்பில் […]
கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின் புதூர் சக்கரத்தாழ்வார் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். என்ஜீனியரான இவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி டென்னிஸ் ராணி. இவர்களின் மகள் சரிகா லெட்சுமி கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். மகன் வினய் குமார் ராசிபுரத்தில் ஒரு தனியார் பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வருகிறார். கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறந்ததால் தனது மகனை பள்ளியில் விடுவதற்காக டென்னிஸ் ராணி ராசிபுரம் சென்றுள்ளார். வீட்டில் […]