• June 8, 2025

கோவில்பட்டியில் போலீஸ் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு வலியுறுத்தல்

 கோவில்பட்டியில் போலீஸ் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு வலியுறுத்தல்

கோவில்பட்டியில் அதிகரித்து வரும் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தலைவர் தமிழரசன் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முற்றுகை போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி ரவிகுமார், மருதமாரியப்பன், மக்கள் நீதி மய்யம் கட்சி ராதாகிருஷ்ணன், பகுஜன் சமாஜ் கட்சி மாணிக்கராஜ் , மனித நேய மக்கள் கட்சி செண்பகராஜ், தமிழ் புலிகள் கட்சி பீமராவ், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு அருள்தாஸ், பகத்சிங் ரத்ததான கழக அறக்கட்டளை காளிதாஸ் , லட்சுமணன்,, தமிழ் நாடு காமராஜர் பேரவை நாஞ்சில்குமார், தர்மம் வெல்லும் அறக்கட்டளை பூலோகப்பாண்டியன், மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்துகுமார், தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு மேரிசீலா, வழக்கறிஞர் முத்துக்குமார், தொழிலாளர் விடுதலை முன்னணி கலைச்செல்வன், வணிகர் சங்க பேரவை ஜாகிர்உசேன்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். பின்னர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- 

*கோவில்பட்டி உட்கோட்டத்தில் உளவுத்துறையின் செயல் பாட்டை அதிகரிக்க வேண்டும்.

*மக்கள் தொகைக்கு ஏற்ப போலீசாரின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.

*இரவு நேர ரோந்து பணிகளை விரிவு படுத்த வேண்டும்.

*செயல்படாத புறக்காவல் நிலையங்களை செயல்படுத்த வேண்டும்.

*காவல் நிலைய எல்லைகளை மறு வரையறை செய்ய வேண்டும்.

*காவல் நிலையத்திற்கு வரும் புகார்கள் மீது உடனுக்குடன் விசாரித்து தீர்வு காணவேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகள்  மனுவில் வலியுறுத்தப்பட்டு இருந்தன.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *