அரசு கல்லூரிகளில் மிருதங்கம், கரகம் உள்ளிட்ட கலைகள் பயிற்றுவிக்கும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு வாய்ப்பு

தமிழக அரசின் செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-
குரலிசை, தேவாரம், மிருதங்கம், பரதநாட்டியம். ஓவியம்,.நவீன சிற்பம், கைவினை, கிராமிய பாடல், கரகம், தப்பாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
அதன்படி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆண்டுக்கு 80 வகுப்புகள் நடத்தப்பட்டு தொகுப்பு ஊதியம் வழங்கப்படும்.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜூன் 25-ந்தேதி ஆகும். மேலும் விவரங்களுக்கு கலை பண்பாட்டு துறையின் www.artandculture.tn.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம்.
இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
