17 வயதுக்கு உட்பட்டோருக்கான மாவட்ட ஆக்கி லீக் போட்டிகள்; கோவில்பட்டியில் 2 நாட்கள் நடக்கிறது

தமிழ்நாடு பள்ளிகளுக்கு இடையிலான மாணவர்களுக்கான (17 வயதுக்குட்பட்டோருக்கான) மாநில அளவிலான ஆக்கி லீக் போட்டி ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடைபெற உள்ளது அதற்கு முன்னதாக மாவட்ட அளவிலான போட்டிகளும் மண்டல அளவிலான போட்டிகளும் நடத்தப்பட உள்ளன
இப் போட்டியில் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள் மட்டுமே கலந்து கொண்டு விளையாட உள்ளன. மொத்தம் 38 மாவட்டங்களில் 250 க்கு மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளன.
இப் போட்டி மூலம் 4500 க்கும் மேற்பட்ட வீரர்கள் சான்றிதழ் பெற்று அடிமட்ட மக்கள் அனைவரும் ஆக்கி விளையாட்டை விளையாடுவதன் முக்கிய நோக்கமாக இந்த போட்டி நடத்தப்படுகிறது.
மாநிலப் போட்டி சென்னையிலும் மாவட்ட போட்டிகள் அந்தந்த மாவட்ட தலைநகரங்களிலும் நடத்தப்படும் மாநிலப் போட்டிக்கு ஒருங்கிணைப்பாளராக கிளமெண்ட் லூர்துராஜ் , சார்லஸ் டிக்சன் ஆகியோர் நியமிக்கப்பட்டு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்ட அளவில் போட்டிகள் நடத்துவதற்கு உடற்கல்வி ஆசிரியர் திருச்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், பாரதி ராஜன், சுரேஷ்குமார், வேல்முருகன் ஆகியோர் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்ட ஆக்கி லீக் போட்டிகள் ஜூலை 6 மற்றும் 7 தேதிகளில் கோவில்பட்டி செயற்கைப்புல் ஆக்கி மைதானத்தில் நடைபெறும். விளையாட விருப்பமுள்ள அணிகள் ஜூலை 1 ம் தேதிக்குள் 94870 49966 என்ற அலைபேசியில் தொடர்பு கொண்டு பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ள ப்படுகிறார்கள்.
