சீரமைக்கப்பட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கம்; கனிமொழி எம்.பி.திறந்து வைத்தார்



தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சீரமைக்கப்பட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கம் திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (12/6/2024) நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கலந்துகொண்டு ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சீரமைக்கப்பட்ட மக்கள் குறைதீர்க்கும் அரங்கத்தைத் திறந்து வைத்தார்.
தொடர்ந்து, பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், இலவச வீட்டுமனைப் பட்டா, மின் மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளைக் கனிமொழி எம்.பி வழங்கினார்.
இந்த விழாவில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்ம சக்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநர் இரா.ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
