• June 8, 2025

கட்டாய வருமான வரி பிடித்தம் செய்யும் முறையை கைவிடக் கோரி ஆரம்பபள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

 கட்டாய வருமான வரி பிடித்தம் செய்யும் முறையை கைவிடக் கோரி ஆரம்பபள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தூத்துக்குடி மாவட்ட கிளை சார்பாக தூத்துக்குடி கருவூல அலுவலகம் முன்புகோரிக்கை முழக்க  ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சு.செல்வராஜ் தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் மா. கலை உடையார் கோரிக்கை விளக்க உரையாற்றினார்.

 மாநிலச் செயற்குழு உறுப்பினர் அண்டனி சார்லஸ் ,தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி கல்வி மாவட்ட பொறுப்பாளர்கள்  முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகன் வாழ்த்துரை வழங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரப் பொறுப்பாளர்களும் இயக்க உறுப்பினர்களும் கலந்துகொண்டு கோரிக்கை முழக்கமிட்டனர். மாவட்ட பொருளாளர் ஜெயசீலி நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்திய கோரிக்கைகள் வருமாறு:-

*தேசிய சுகாதார நேர்காணல் கணக்கெடுப்பு (NHIS) திட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு  கட்டணமில்லா சிகிச்சை அளிக்க  வேண்டும்.

*ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பு (IFHRMS) முறையில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடம் கட்டாய வருமான வரி பிடித்தம் செய்யும் முறையை கைவிடவேண்டும்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *