• June 7, 2025

Month: November 2023

செய்திகள்

அரசு மரியாதையுடன் சங்கரய்யா உடல் தகனம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முதுபெரும் தலைவர் சங்கரய்யா. சுதந்திர போராட்ட தியாகியான இவர், சென்னை குரோம்பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். முதுமை காரணமாக வீட்டில் ஓய்வு எடுத்து வந்த சங்கரய்யாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சளி மற்றும் இருமல் தொல்லையால் கடந்த சில நாட்களாக அவர் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து கடந்த 13-ந் தேதி சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சங்கரய்யா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த […]

தூத்துக்குடி

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள்; கனிமொழி எம்.பி.ஆய்வு

 தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 13.11.2023 முதல் நடைபெற்று வருகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவதால், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை  மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து தரப்பட்டுள்ளது. மேலும் வாகனங்களை நிறுத்துவதற்கு ஆங்காங்கே தற்காலிக மைதானம் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.. பக்தர்களுக்கு தேவையான வசதிகள்  ஏற்படுத்தப்பட்டுள்ளதை உறுதிசெய்யும் வகையில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் .கோ.லட்சுமிபத […]

செய்திகள்

10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி, அட்டவணை அறிவிப்பு

மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, 10,11,12 -ம் வகுப்பு பொது தேர்வுகளை முன்கூட்டியே நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.  இது பற்றிய அறிவிப்பை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:- 10ம் வகுப்பு 10ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் அடுத்தாண்டு பிப். 23ஆம் தேதி தொடங்கி, பிப். 29ஆம் தேதி நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எழுத்து தேர்வு மார்ச் 26ம் தேதி தொடங்கி, ஏப். 8ம் தேதி வரை நடைபெறும் […]

தூத்துக்குடி

கந்தசஷ்டி விழா:திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் 24 மணி நேரமும் மருத்துவ குழு ;

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி விழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி,   ஆலோசனையின் பேரில் துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு.ச.பொற்செல்வன்  தலைமையில் சுகாதாரத்துறை சார்பாக 24 மணி நேரமும் சிகிச்சையளிக்கும் வகையில் மருத்துவ குழுக்கள் மூலம் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் மருத்துவ குழுக்கள் 24 மணி நேரமும் சிகிச்சையளிக்கும் வகையில் மருத்துவர்கள், செவிலியர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு கலையரங்கம் அருகில், கோவிலின் உட்புறம் வடக்கு வாசல் அருகில், நாழிக்கிணறு அருகில், […]

கோவில்பட்டி

சங்கரய்யா மறைவு : கோவில்பட்டியில் இரங்கல் கூட்டம்

விடுதலைப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான  சங்கரய்யா 102 வயதில் காலமானார். அவரின் மறைவை ஒட்டி கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் எதிரில் அனைத்து கட்சி சார்பில் இன்று (15.11.2023) மாலை  இரங்கல் கூட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன் தலைமை தாங்கினார். மறைந்த சங்கரய்யா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அவர் குறித்தான  தியாகங்களையும்,போராட்ட வாழ்க்கை பற்றி பலரும் நினைவு கூர்ந்தனர்.  இந்நிகழ்வில் திமுக […]

செய்திகள்

மறைந்த சங்கரய்யா உடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை; முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- தகைசால் தமிழர் முதுபெரும் பொதுவுடைமைப் போராளி – விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என். சங்கரய்யா  மறைந்த செய்தியால் துடிதுடித்துப் போனேன். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் விரைந்து நலம் பெற்று விடுவார் என்றே நம்பியிருந்த வேளையில் அவர் மறைந்த செய்தி வந்து அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்தது. மிக இளம் வயதிலேயே பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு, 102 வயது வரை இந்திய நாட்டுக்காகவும், உழைக்கும் வர்க்கத்துக்காகவும், தமிழ் மண்ணுக்காகவும் வாழ்ந்து […]

தூத்துக்குடி

154வது பிறந்தநாள்: குருஸ் பர்னாந்து சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு

தூத்துக்குடி நகர தந்தை என அழைக்கப்படும் ராவ் பகதூர் குருஸ் பர்னாந்து 154வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு தி.மு.க. துணை பொதுசெயலாளர் கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் நேரு பிறந்தநாள் கருத்தரங்கம்

இந்திய கலாச்சார நட்புறவு கழகம், ஜெய்கிறிஸ்ட் அறக்கட்டளை இணைந்து ஜவஹர்லால் நேருவின் 134வது பிறந்தநாளை முன்னிட்டு நவீன இந்தியாவின் சிற்பி என்ற தலைப்பில் கருத்தரங்கத்தை நடத்தின. கருத்தரங்கிற்கு இந்திய கலாச்சார நட்புறவுக் கழகத்தின் மாநிலச் செயலாளர் க.தமிழரசன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர். ஜெயஶ்ரீ கிறிஸ்டோபர் மற்றும் ரோட்டரி துணை ஆளுநர் முத்துச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேருவின் திருவுருவப்படத்திற்கு இந்திய கலாச்சார நட்புறவுக் கழக மாவட்டச் செயலாளர் சுப்பாராஜ் மாலை அணிவித்து மரியாதை செய்தார். தமிழ்நாடு முற்போக்கு […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில், குருஸ் பர்னாந்து மணி மண்டபம் திறப்பு

தூத்துக்குடி நகராட்சி தலைவராக 21.12.1909-ல் பொறுப்பேற்ற ராவ்பகதூர் குருஸ் பர்னாந்து 5 முறை தொடர்ந்து நகராட்சி மன்ற தலைவராக இருந்து சேவை ஆற்றி உள்ளார். 1927-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மிகக் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டபோது நெல்லை தாமிரபரணி ஆற்றிலிருந்து குழாய் மூலம் நீர் கொண்டு வரும் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி, மக்களின் பாராட்டினை பெற்றார். ‘ இந்த குடிநீர்ப்பிரச்சினைகளை தீர்த்தது மட்டுமல்லாமல் நகரின் பல வளர்ச்சிப் பணிகளையும் நிறைவேற்றியதனால் ராவ் பகதூர் குருஸ் பர்னாந்து […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் வழிப்பறி: 3 பேர் கைது

கோவில்பட்டி, தெப்பக்குளத் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் அன்பழகன் (வயது 35). இவா், திருப்பதி காலனியில் உள்ள பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனத்தில் விற்பனையாளராக உள்ளாா். அந்நிறுவனத்தில், அசாம் மாநிலத்தை சோ்ந்த சிராஜுல்ஹக், இம்ரான் அலி உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சோ்ந்த 15 போ் வேலை பாா்த்து வருகின்றனா். திங்கட்கிழமை சிராஜுல்ஹக், இம்ரான்அலி ஆகியோா் கோவில்பட்டி ராஜீவ் நகரில் உள்ள குடியிருப்புக்கு சென்றபோது, 2 மோட்டார் சைக்கிள்களில்  வந்த 4 போ் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனராம். […]