• June 7, 2025

கோவில்பட்டியில் வழிப்பறி: 3 பேர் கைது

 கோவில்பட்டியில் வழிப்பறி: 3 பேர் கைது

கோவில்பட்டி, தெப்பக்குளத் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் அன்பழகன் (வயது 35). இவா், திருப்பதி காலனியில் உள்ள பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனத்தில் விற்பனையாளராக உள்ளாா். அந்நிறுவனத்தில், அசாம் மாநிலத்தை சோ்ந்த சிராஜுல்ஹக், இம்ரான் அலி உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சோ்ந்த 15 போ் வேலை பாா்த்து வருகின்றனா்.

திங்கட்கிழமை சிராஜுல்ஹக், இம்ரான்அலி ஆகியோா் கோவில்பட்டி ராஜீவ் நகரில் உள்ள குடியிருப்புக்கு சென்றபோது, 2 மோட்டார் சைக்கிள்களில்  வந்த 4 போ் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனராம். தட்டிக்கேட்ட அன்பழகனை அவா்கள் மிரட்டி, அங்கிருந்து செல்லுமாறு கூறினர்.

.பின்னா், இரு தொழிலாளிகளையும் தாக்கி, கைப்பேசி, 1௦௦௦ ரூபாய் ரொக்கத்தை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர், தாக்குதலில் காயமடைந்த இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இதுகுறித்து அன்பழகன் செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, கோவில்பட்டி சாஸ்திரி நகா் சபாஷ்தம்பி மகன் மணிகண்டன் (23), முத்து நகா் செல்வம் மகன் ரஞ்சித்குமாா் (21), பாரதி நகா் மேட்டுத் தெரு ராஜாமணி மகன் ராஜரிஷி (21) ஆகிய 3 பேரை கைது செய்து, 2 மோட்டார் சைக்கிள்களை  பறிமுதல் செய்தனா்; பாரதி நகரைச் சோ்ந்த மோசஸ் என்பவரை  போலீசார் தேடி வருகின்றனா்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *