தூத்துக்குடியில், குருஸ் பர்னாந்து மணி மண்டபம் திறப்பு

தூத்துக்குடி நகராட்சி தலைவராக 21.12.1909-ல் பொறுப்பேற்ற ராவ்பகதூர் குருஸ் பர்னாந்து 5 முறை தொடர்ந்து நகராட்சி மன்ற தலைவராக இருந்து சேவை ஆற்றி உள்ளார்.
1927-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மிகக் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டபோது நெல்லை தாமிரபரணி ஆற்றிலிருந்து குழாய் மூலம் நீர் கொண்டு வரும் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி, மக்களின் பாராட்டினை பெற்றார். ‘
இந்த குடிநீர்ப்பிரச்சினைகளை தீர்த்தது மட்டுமல்லாமல் நகரின் பல வளர்ச்சிப் பணிகளையும் நிறைவேற்றியதனால் ராவ் பகதூர் குருஸ் பர்னாந்து “தூத்துக்குடி மக்களின் தந்தை” என போற்றப்படுகிறார். அவரை போற்றும் வகையில் அவருக்கு தூத்துக்குடி மாநகராட்சி பூங்காவில் தமிழ்நாடு அரசின் சார்பில் தூத்துக்குடி மாநகராட்சி பூங்காவில் ரூ.77.87 லட்சம் செலவில் ராவ்பகதூர்குருஸ் பர்னாந்துக்கு மணி மண்டபத்துடன் கூடிய திருவுருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.
ராவ் பகதூர் குருஸ் பர்னாந்து மணிமண்டபத்தை , முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். தூத்துக்குடியில் இந்த நிகழ்வில் அமைச்சர்கள்.பி.கீதா ஜீவன்,.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், கனிமொழி எம்.பி.மாவட்ட ஆட்சியர் .கோ.லட்சுமிபதி, மாநகராட்சி மேயர் .பெ.ஜெகன்,ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர்.எம்.சி.சண்முகையா,விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் .ஜி.வி.மார்க்கண்டேயன் ,மாவட்ட ஊராட்சி தலைவர் அ.பிரம்மசக்தி, ,தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் .செ.ஜெனிட்டா ஆகியோர் கலந்து கொண்டனர்.
