சங்கரய்யா மறைவு : கோவில்பட்டியில் இரங்கல் கூட்டம்

விடுதலைப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யா 102 வயதில் காலமானார்.
அவரின் மறைவை ஒட்டி கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் எதிரில் அனைத்து கட்சி சார்பில் இன்று (15.11.2023) மாலை இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன் தலைமை தாங்கினார். மறைந்த சங்கரய்யா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அவர் குறித்தான தியாகங்களையும்,போராட்ட வாழ்க்கை பற்றி பலரும் நினைவு கூர்ந்தனர்.
இந்நிகழ்வில் திமுக நகர செயலாளரும், கோவில்பட்டி நகர் மன்ற தலைவருமான கருணாநிதி, மதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும், கோவில்பட்டி நகர்மன்ற துணைத் தலைவருமான ஆர். எஸ். ரமேஷ், காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் அருண்பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருநெல்வேலி மாவட்ட செயலாளர் காசி விஸ்வநாதன், நகர செயலாளர் சரோஜா , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர்கள் ஜோதிபாசு, விஜயலட்சுமி மற்றும் நகரக்குழு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன் நிறைவு இரங்கல் உரையாற்றினார்.
