திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள்; கனிமொழி எம்.பி.ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 13.11.2023 முதல் நடைபெற்று வருகிறது.
பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவதால், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து தரப்பட்டுள்ளது. மேலும் வாகனங்களை நிறுத்துவதற்கு ஆங்காங்கே தற்காலிக மைதானம் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது..
பக்தர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதை உறுதிசெய்யும் வகையில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் .கோ.லட்சுமிபத ஆகியோர் முன்னிலையில் இன்று (16.11.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் இரா.அருள் முருகன், திருச்செந்தூர் நகர்மன்றத் தலைவர் சிவ ஆனந்தி, துணைத் தலைவர்.பி.ரமேஷ், வருவாய் கோட்டாட்சியர் .குருச்சந்திரன், மண்டல இணை ஆணையர் (இந்து சமய அறநிலையத்துறை) அன்பு மணி, திருச்செந்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் வசந்தராஜ், இணை ஆணையர் (திருச்செந்தூர் திருக்கோவில்) கார்த்திக், திருச்செந்தூர் வட்டாட்சியர் வாமனன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
