யூடியூப் மூலம் புகழ் பெற்ற டியூட் விக்கி இயக்கும் திரைப்படம் ‘மண்ணாங்கட்டி’. இந்த படத்தில் நடிகை நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் யோகி பாபு, தேவதர்ஷினி, கவுரி கிஷன், நரேந்திர பிரசாத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. விரைவில் ‘மண்ணாங்கட்டி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. […]
தமிழ் திரையுலகில் பிரபல வில்லனாக வலம் வருபவர் மன்சூர் அலிகான். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து மன்சூர் அலிகான் ‘சரக்கு’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஜெயக்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக வலினா பிரின்ஸ் நடித்துள்ளார். மேலும், நாஞ்சில் சம்பத், மொட்டை ராஜேந்திரன், வினோதினி, கிங்ஸ்லி, ரவி மரியா, லொள்ளுசபா மனோகர், மதுமிதா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. […]
கோவில்பட்டியில் இருந்து வேம்பாருக்கு விநாயகர் சிலைகள் ஊர்வலம்; கடலில் சிலைகளை கரைக்க ஏற்பாடு
கோவில்பட்டி நகரம், ஒன்றிய இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கடந்த 18-ந்தேதி 45 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சிலைகளுக்கு தினமும் காலை, மாலையில் பூஜைகள் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று மாலையில் கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் தனித்தனி வாகனங்களில், மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலமாக லட்சுமி மில் மேம்பாலம் முன்பு கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை […]
கோவில்பட்டியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை (மாதம் ரூ.1000) கிடைக்காத பெண்கள் மேல்முறையீடு மனு கொடுப்பதற்காக சிறப்பு முகாம் நடந்து வருகிறது. தாலுகா அலுவலகத்தில் நடந்து வரும் இந்த முகாமில் மேல்முறையீடு மனு கொடுப்பதற்காக ஏராளமான பெண்கள் குவிந்தனர். பெண்கள் அதிக அளவில் வந்ததால், விண்ணப்பத்தின் நிலைகுறித்தும், மேல்முறையீடு குறித்தும் விளக்கம் அளிக்க டோக்கன் வழங்கப்பட்டது. இந்த டோக்கனை வாங்குவதற்கு பெண்கள் முண்டியடித்து கொண்டு சென்றதால் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி வயதான பெண்கள் சிலர் மயங்கினர். […]
கோவில்பட்டி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையில் போலீசார் எட்டயபுரம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை போலீசார் நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த காரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த காரில் இருந்த 25 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து காரை ஓட்டி வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் கோவில்பட்டி பசுவந்தனை சாலையை சேர்ந்த […]
நாடு முழுவதும் செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 2ம் தேதி வரை தூய்மையே சேவை இயக்கம் மூலம் குப்பையில்லா இந்தியாவை உருவாக்கிட சுகாதார முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்ட தூய்மை பாரத இயக்கம் சார்பில் கோவில்பட்டி ஐ.சி.எம் நடுநிலைப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பொது இடங்களை தூய்மையாக வைத்திருக்கவும், திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற கிராமங்களை உருவாக்கிடவும்,சுகாதார பழக்க வழக்கங்களை கடைபிடிக்கவும்,திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை திட்டத்தினை […]
தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பித்தவர்களின் நிலை குறித்து அவர்கள் அறிந்திடும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தின் செயல்பாடுகள் குறித்து சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்; மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், வட்டாட்சியர் பிரபாகரன் மற்றும் மாநகர தி.மு.க. செயலாளர் . ஆனந்தசேகரன் உள்ளிட்ட பகுதி செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சில நாட்களாக சீசன் நிலவி வருகிறது. தென்மேற்கு மலை பகுதியில் கனமழை கராணமாக குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்பதால் பகலில் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். எல்லா அருவிகளிலும் கூட்டம் அலைமோதியது. மெயின் அருவியில் நிறைய பேர் மகிழ்ச்சியுடன் குளித்துக்கொண்டு இருந்தனர். அப்போது திடீர் என்று ராட்சத பாம்பு ஒன்று அருவியில் விழுந்தது. குளித்துகொண்டிருந்தவர்களில் ஒருவர் மீது விழுந்த அந்த பாம்பை […]
கோவில்பட்டியில் விஸ்வகர்ம மகாஜன சங்கம் சார்பில் விஸ்வகர்ம தொழிலாளர் சங்கம் மற்றும் விஸ்வகர்மா நகை தொழிலாளர்கள் சங்கம் இணைந்து விஷ்வப்பிரம்ம ஜெயந்தி விழா மற்றும் ஆராதனை விழாவை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் அதிகாலை விஸ்வகர்மா சிலைக்கு பால் பன்னீர் 18 வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டது ஐந்தொழிலாளர்கள் தொழிலை சித்தரிக்கும் வகையில் விஸ்வகர்ம பகவான் ரத யாத்திரை நடைபெற்றது. ரத யாத்திரையை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ.கொடியசைத்து தொடக்கி வைத்தார். ரத யாத்திரை காந்தி மைதானத்தில் தொடங்கி […]
ஐதராபாத்தில் தெலுங்கு தயாரிப்பாளர், டைரக்டர் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். தமிழில் ஏகன், நெஞ்சில், சொல்ல சொல்ல இனிக்கும், இது என்ன மாயம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள தெலுங்கு நடிகர் நவ்தீப்புக்கும் போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும், அவரை தேடி வருகிறோம் என்றும் போலீஸ் அதிகாரி தெரிவித்தார். இதையடுத்து நவ்தீப்பை போலீசார் தேடுவதாக அவரது புகைப்படத்துடன் வலைத்தளத்தில் தகவல் பரவியது. நான் எங்கேயும் ஓடவில்லை என்றும், போலீஸ் தேடும் நபர் நான் இல்லை என்றும் நவ்தீப் […]