கோவில்பட்டியில் விஸ்வகர்ம பகவான் ரத யாத்திரை; கடம்பூர் ராஜு தொடக்கி வைத்தார்

கோவில்பட்டியில் விஸ்வகர்ம மகாஜன சங்கம் சார்பில் விஸ்வகர்ம தொழிலாளர் சங்கம் மற்றும் விஸ்வகர்மா நகை தொழிலாளர்கள் சங்கம் இணைந்து விஷ்வப்பிரம்ம ஜெயந்தி விழா மற்றும் ஆராதனை விழாவை நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் அதிகாலை விஸ்வகர்மா சிலைக்கு பால் பன்னீர் 18 வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டது ஐந்தொழிலாளர்கள் தொழிலை சித்தரிக்கும் வகையில் விஸ்வகர்ம பகவான் ரத யாத்திரை நடைபெற்றது.
ரத யாத்திரையை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ.கொடியசைத்து தொடக்கி வைத்தார். ரத யாத்திரை காந்தி மைதானத்தில் தொடங்கி பார்க் ரோடு, அண்ணா பேருந்து நிலையம், புதுரோடு வழியாக மீண்டும் காந்தி மைதானம் வந்தடைந்தது.

ரத யாத்திரையில் 600க்கும் மேற்பட்ட விஸ்வகர்மா தொழிலாளர்கள் குடும்பத்துடன் வகலந்து கொண்டனர். விஸ்வகர்ம ஐந் தொழிலாளர்கள், தொழில்களை சித்தரிக்கும் வகையில் மேளதாளம் முழங்க பேரணி நடைபெற்றது..
பேரணி முடிவில் நடந்த விழாவிற்கு விஸ்வகர்மா ஜெயந்தி விழா குழு தலைவர் பாலமுருகேசன் தலைமை தாங்கினார்.மாடசாமி, முருகேசன், ஆகியோர் முன்னிலை வைத்தனர். பாலசுப்பிரமணியன் வரவேற்புரை வழங்கினார். பால் சாமி, ராஜமாணிக்கம், ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். முடிவில் காளியப்பன் நன்றி கூறினார்.
