குப்பையில்லா இந்தியாவை உருவாக்கிட கோவில்பட்டி மாணவர்கள் உறுதியேற்பு

நாடு முழுவதும் செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 2ம் தேதி வரை தூய்மையே சேவை இயக்கம் மூலம் குப்பையில்லா இந்தியாவை உருவாக்கிட சுகாதார முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்ட தூய்மை பாரத இயக்கம் சார்பில் கோவில்பட்டி ஐ.சி.எம் நடுநிலைப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பொது இடங்களை தூய்மையாக வைத்திருக்கவும், திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற கிராமங்களை உருவாக்கிடவும்,சுகாதார பழக்க வழக்கங்களை கடைபிடிக்கவும்,திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை திட்டத்தினை பாதுகாப்பான முறையில் செயல்படுத்தவும்,குப்பையில்லா இந்தியாவை உருவாக்கிடவும்உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை ராதா, சுகாதார பயிற்றுனர் முத்து முருகன்,ஆசிரியர்கள் செல்வகுமார்,பத்மாவதி,சுப்புலட்சுமி,செல்லம்மாள்,தனலட்சுமி,உள்பட பலர் கலந்து கொண்டனர்.
#கோவில்பட்டி#கோவில்பட்டி வேலை#கோவில்பட்டி ஐயப்ப பஜன்#கோவில்பட்டி செண்பகவல்லிஅம்மன்கோயில்#கோவில்பட்டிகோயில்#திருக்கோவில்#கதிரேசன் கோவில்#கதிரேசன் கோவில் புலிக்குகை, #,தெப்பக்குளம்#தூத்துக்குடி வேலை
