கலைஞர் மகளிர் உரிமை திட்டம்: உதவி மையத்தில் அமைச்சர் ஆய்வு

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பித்தவர்களின் நிலை குறித்து அவர்கள் அறிந்திடும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தின் செயல்பாடுகள் குறித்து சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்;
மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், வட்டாட்சியர் பிரபாகரன் மற்றும் மாநகர தி.மு.க. செயலாளர் . ஆனந்தசேகரன் உள்ளிட்ட பகுதி செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
