• June 6, 2025

Month: September 2023

கோவில்பட்டி

`வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டியில் நிற்கும்’ என்ற அறிவிப்பு கண்டிப்பாக வரும்; ஆர்ப்பாட்டத்தில்

சென்னை – திருநெல்வேலி இடையே இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ விரைவு ரெயில் கோவில்பட்டியில் நின்று செல்ல வலியுறுத்தி நேற்று மாலை மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அண்ணா பஸ் நிலையம் எதிரே பயணியர் விடுதி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தலைமை தாங்கி  பேசியதாவது:-  கோவில்பட்டி மிகப்பெரிய வணிக நகரம். எதிர்காலத்தில் மாவட்டமாக உருவாகும் போது அதன் தலைநகராகவும் கோவில்பட்டி இருக்கப் போகிறது. இவ்வளவு முக்கியமான, மையப்பகுதியில் உள்ள கோவில்பட்டி நகரை […]

கோவில்பட்டி

சாலை வசதி கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டம்

கோவில்பட்டியை அடுத்த  இலுப்பையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட மறவர் காலனி மேட்டு தெருவில் இரு பக்கமும் சாலை மிகவும் குண்டு குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற முறையில் உள்ளது. இந்த சாலையை உடனடியாக செப்பனிட்டு தர வேண்டும், இப்பகுதியில் தட்டுப்பாடு இல்லாமல் குடிநீரை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இப்பகுதியில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் நூறுநாள் வேலை அடையாள அட்டை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு […]

கோவில்பட்டி

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் நலத்திட்ட உதவிகள்; அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் முகாமை தொடங்கி வைத்து பேசுகையில் கூறியதாவது:-  தூத்துக்குடி மாவட்டத்தில் 42,727 மாற்றுத்திறனாளிகள் தமிழ்நாடு அரசின் அடையாள அட்டை பெற்றுள்ளனர். மத்திய அரசின் தேசிய அடையாள அட்டை 21,337 பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தேசிய […]

கோவில்பட்டி

கோவில்பட்டி –  நல்லி இடையே லெவல் கிராசிங் கேட் 26 ந் தேதி

கோவில்பட்டி –  நல்லி ரெயில் நிலையங்கள் இடையே அமைந்துள்ள லெவல் கிராசிங் கேட் நாளை (26-ந்தேதி)மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக தெற்கு ரெயில்வே மூத்த பிரிவு பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது :- தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி –  நல்லி ரெயில் நிலையங்கள் இடையே அமைந்துள்ள லெவல் கிராசிங் கேட் நாளை 26.9.2023 ஆம் தேதி இருப்புப்பாதை அவசர பராமரிப்புப் பணிகளுக்காக காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை […]

செய்திகள்

பா. ஜனதா வுடன் கூட்டணி இல்லை ;அ. தி. மு. க. அதிகாரப்பூர்வ

பா. ஜனதாவுடன் அ. தி. மு. க. கூட்டணி முறிந்தது. இது தொடர்பாக அ. தி. மு. க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் வருமாறு :-

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் மதுக்கடைகள் 2 நாட்கள் மூடல்; கலெக்டர் உத்தரவு

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:_  28.9.2023 (வியாழக்கிழமை) மிலாடிநபி மற்றும் 2.10.2023 (திங்கள் கிழமை) காந்தி ஜெயந்தி ஆகிய தினங்களை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தால் (டாஸ்மாக்) நடத்தப்படும் மதுபானக் கடைகள் அவற்றுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், கிளப்புகள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்படவேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது. எனவே தூத்துக்குடி  மாவட்டத்திலுள்ள மதுபானக்கடைகள் அவற்றுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், கிளப்புகள் மற்றும் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா

கோவில்பட்டியில் தமிழ்நாடு காமராஜர் பேரவை சார்பில் டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. வழக்கறிஞர் ரத்தினராஜா தலைமை தாங்கினார். காளிராஜ், அருண்குமார், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊராட்சிக் குழு துணைத்தலைவர் மகாலட்சுமி சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன், தமிழ்நாடு காமராஜர் பேரவை தலைவர் நாஞ்சில் குமார் ஆகியோர் இனிப்பு வழங்கினர். கருத்துரிமை […]

கோவில்பட்டி

கோவில்பட்டி பத்மபிரபா மருத்துவமனையில் லேசர் மற்றும் அழகியல் சிறப்பு சிகிச்சை மையம்

கோவில்பட்டி முத்தானந்தபுரம் தெரு டாக்டர் காந்திராஜ் ஆஸ்பத்திரி, பத்மபிரபா மருத்துவமனையில் உயர்தர நவீன லேசர் மற்றும் அழகியல் சிறப்பு சிகிச்சை மையம் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு மருத்துவமனை தலைமை மருத்துவர் எஸ். காந்திராஜ் தலைமை தாங்கினார். டி. கோபால்சாமி முன்னிலை வகித்தார். டாக்டர் பத்ம பிரகாஷ் காந்தி ராஜ் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் டாக்டர் பால கங்காதர திலகம், ராஜேஸ்வரி காந்திராஜ், டாக்டர் டி.ஜி. நர்மதா தேவி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினா். மருத்துவமனை நிர்வாக இயக்குனர் […]

செய்திகள்

அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் பொன்.கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட […]

கோவில்பட்டி

பூவனநாதசுவாமி கோவில் பெண் அறங்காவலருக்கு வாழ்த்து

கோவில்பட்டி அருள்மிகு ஶ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி திருக்கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்களில் ஒருவராக தி.நிருத்திய லட்சுமி நியமிக்கப்பட்டு பதவி ஏற்றுள்ளார். இவர்  தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்கத்தின் கோவில்பட்டி மண்டல இணைச் செயலாளா் .ஜெயக்கண்ணனின் சகோதரி ஆவார். தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்கத்தின் சார்பாக தி.நிருத்திய லட்சுமிக்கு  வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. கம்மநாயுடு மகாஜன சங்க மண்டல செயல் தலைவா் ஆர்.செல்வராஜ் , மண்டல செயலாளா் சி.வேல்ராஜ் , மண்டல பொருளாளர் , பி.கோபாலகிருஷ்ணன் […]