பூவனநாதசுவாமி கோவில் பெண் அறங்காவலருக்கு வாழ்த்து

கோவில்பட்டி அருள்மிகு ஶ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி திருக்கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்களில் ஒருவராக தி.நிருத்திய லட்சுமி நியமிக்கப்பட்டு பதவி ஏற்றுள்ளார். இவர் தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்கத்தின் கோவில்பட்டி மண்டல இணைச் செயலாளா் .ஜெயக்கண்ணனின் சகோதரி ஆவார். தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்கத்தின் சார்பாக தி.நிருத்திய லட்சுமிக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
கம்மநாயுடு மகாஜன சங்க மண்டல செயல் தலைவா் ஆர்.செல்வராஜ் , மண்டல செயலாளா் சி.வேல்ராஜ் , மண்டல பொருளாளர் , பி.கோபாலகிருஷ்ணன் , உப தலைவா் .எஸ்.குமாா் , மாநில பிரதிநிதி டி.வெங்கடேஷ் , செயற்குழு உறுப்பினா் கே.சீத்தாராமன் , பி.சீனிவாசகம் மற்றும் நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
