• June 7, 2025

Month: September 2023

செய்திகள்

ஒரு கோடி பெண்களுக்கு மாதம் தலா ரூ.1,000 வழங்கும் திட்டம்; மு.க.ஸ்டாலின் தொடங்கி

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக வெளியிடப்பட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கையில், உள்ள குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்குவோம்’ என்று அறிவிக்கப்பட்டது. தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில், பல்வேறு அறிவிப்புகள் நடைமுறைக்கு வந்தாலும், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் தலா ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் அந்த பட்டியலில் இடம்பெறாமலேயே இருந்து வந்தது. இதனிடையே, தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் தே.மு.தி.க. பொதுக்கூட்டம்

தூத்துக்குடி வடக்கு மற்றும் மாநகர் மாவட்டம் சார்பில்  விஜயகாந்த் பிறந்தநாள் மற்றும் தே.மு.தி.க. 19 ம் ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் வடக்கு மாவட்டசெயலாளர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. மாநகர் மாவட்டசெயலாளர் தாயளலிங்கம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கழக கேப்டன் மன்ற செயலாளர் செல்வ அன்புராஜ், கழக மகளிர் அணி  துணைசெயலாளர் சுபப்பிரியா ஆகியோர் பங்கேற்று பேசினார்கள். கோவில்பட்டி நகர செயலாளர் நேதாஜிபாலமுருகன் வரவேற்றார். மாவட்ட அவைத்தலைவர் கொம்பையா பாண்டியன், […]

தூத்துக்குடி

பழைய செல்போன் வாங்க, விற்க ஆதார் கார்டு அவசியம்- தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் செல்போன் திருடுபவர்கள் அதை தங்களுடையது என பழைய செல்போன் விற்பனையாளர்களிடம் விலைக்கு விற்று வருவதும், அதே போன்று அவர்கள்  செல்போன்கள் யாருக்கு விற்கப்படுகிறது என்ற எவ்வித விபரமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுவதும் தெரியவந்துள்ளது. ஆகவே மேற்படி விற்பனையாளர்கள் தங்களிடம் செல்போன்களை விற்பனை செய்ய வருபவர்களிடமும், வாங்க வருபவர்களிடமும், அவர்களது புகைப்படம் மற்றும் முகவரி ஆகியவற்றை பெற்று, அவர்களது […]

சினிமா

கமல்ஹாசனின் புதிய படத்தில் நடிக்க ஜெயம் ரவி, திரிஷா, துல்கர் சல்மானுடன் பேச்சுவார்த்தை

நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன்-2 படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்து வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இது அவரது 233வது படம் (KH233) ஆகும். இந்த படத்திற்காக கமல் ஹாசன் தயாராகி வருகிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் முன்பே, 234வது படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. கமல் ஹாசன் நடிக்கும் 234வது படத்தை மணிரத்னம் இயக்க உள்ளார். ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் […]

கோவில்பட்டி

நல்லாசிரியர் விருது பெற்ற 2 தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு

.தமிழக அரசின் 2023-24ஆம் ஆண்டிற்கான நல்லாசிரியர்  விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற கோவில்பட்டியில் உள்ள  2 பள்ளிக்கூட  தலைமை ஆசிரியர்களுக்கு ஜே.சி.ஐ சார்பில் பாராட்டு கூட்டம் நடத்தப்பட்டது.. வ. உ. சி. அரசு  பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு ஜே.சி.ஐ  தலைவர் தீபன்ராஜ் தலைமை தாங்கினார். நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ், பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜே.சி.ஐ.செயலாளர் சூர்யா அனைவரையும் வரவேற்றார். தமிழக அரசின் நல்லாசிரியர் […]

கோவில்பட்டி

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்; 285 பேர் கைதாகி விடுதலை

விலைவாசி உயர்வு, சமையல் எரிவாயு மானியம் வழங்காத மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட நேற்று கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கூடினர். அங்கிருந்து கோரிக்கைளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியவாறு தாலுகா செயலாளர் ஜி. பாபு, நகரச் செயலாளர் சரோஜா ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்களை கோவில்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கிங்ஸ்லி தேவானந்த், வனசுந்தர் மற்றும் போலீசார் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. […]

செய்திகள்

மதுரை-புனலூர் ரெயில்கள் சாத்தூர், கோவில்பட்டியில் நின்று செல்லும்; தெற்கு ரெயில்வே அறிவிப்பு

தெற்கு ரெயில்வே நிர்வாகம்  வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-  பயணிகளின் வசதிக்காக மதுரை – புனலூர் – மதுரை ரெயில்கள் (16729/16730) சாத்தூர், கோவில்பட்டி ரெயில் நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும். அதன்படி புனலூர் செல்லும் ரெயில் சாத்தூர், கோவில்பட்டி ரெயில் நிலையங்களில் இருந்து முறையே அதிகாலை 12.30, 12.48 மணிக்கு புறப்படும்.  புனலூரில் இருந்து மதுரை செல்லும் ரெயில் இந்த ரெயில் நிலையங்களிலிருந்து முறையே அதிகாலை 1.22, 1.40 மணிக்கு புறப்படும். மேலும் திருச்சி- ராமநாதபுரம் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் முதியோர் இல்லத்தில் ஜே.சி.ஐ. சார்பில் அன்னதானம்

கோவில்பட்டி ஜே.சி.ஐ. சார்பில் செப்டம்பர் 9ம் தேதி முதல் 15ம் தேதி வரை ஜே.சி.ஐ. வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்  தொடர்ச்சியாக பல்வேறு சேவை திட்டங்களில் ஒன்றாக கோவில்பட்டி கத்ரேசன் கோவில் சாலையில் உள்ள வெளிச்சம் முதியோர் இல்லத்தில் உள்ள 25க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்  ஜே.சி.ஐ.. தலைவர் தீபன்ராஜ், செயலாளர் சூர்யா, இணை செயலாளர் அருண் பிரசாத்,வெளிச்சம் முதியோர் இல்ல நிர்வாகி ராமையா பாண்டியன்,சமூக ஆர்வலர் முத்து முருகன் உள்பட […]

தூத்துக்குடி

புகையிலை இல்லா கிராமமாக திருப்பணிசெட்டிகுளம் தேர்வு

தேசிய அளவிலான புகையிலை தடுப்பு சட்ட அமலாக்கப் பணிகள் மாநில மற்றும் மாவட்ட அளவில் அமல்படுத்திட விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவின்படி,  ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்திற்குட்பட்ட திருப்பணிசெட்டிகுளம் என்ற ஊராட்சி புகையிலை இல்லா கிராமமாக தேர்வு செய்யப்பட்டது. புகையிலை இல்லாத கிராம ஊராட்சியாக தீர்மானிக்கும் சிறப்பு கிராம சபை கூட்டம் திருப்பணிசெட்டிகுளத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சுயம்புலிங்கம்  தலைமையில் நடைபெற்றது.  சிறப்பு விருந்தினர்களாக தூத்துக்குடி சுகாதார பணிகள் […]

செய்திகள்

தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-  இன்று காலை வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த மூன்று தினங்களில் ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளை நோக்கி நகரக்கூடும். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 13-9-2023 மற்றும் 14-9-2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது […]