கோவில்பட்டியில் தே.மு.தி.க. பொதுக்கூட்டம்

தூத்துக்குடி வடக்கு மற்றும் மாநகர் மாவட்டம் சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் மற்றும் தே.மு.தி.க. 19 ம் ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் வடக்கு மாவட்டசெயலாளர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. மாநகர் மாவட்டசெயலாளர் தாயளலிங்கம் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கழக கேப்டன் மன்ற செயலாளர் செல்வ அன்புராஜ், கழக மகளிர் அணி துணைசெயலாளர் சுபப்பிரியா ஆகியோர் பங்கேற்று பேசினார்கள். கோவில்பட்டி நகர செயலாளர் நேதாஜிபாலமுருகன் வரவேற்றார். மாவட்ட அவைத்தலைவர் கொம்பையா பாண்டியன், அலெக்சாண்டர், மாவட்டபொருளாளர் ராஜன் விஜயன் மாவட்ட துணைசெயலாளர் மாரிச்செல்வம், செயற்குழு உறுப்பினர்கள் பிரபாகரன்,மலைராஜ், ஒன்றிய செயலாளர்கள் தங்கச்சாமி, ஜெயக்குமார், மாரியப்பன், ஆறுமுகபெருமாள் அருண்,நடராஜன் பொன்ராஜ் ஒன்றிய துணைசெயலாளர் நாராயணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர், முடிவில் கோவில்பட்டி மேற்கு ஒன்றியசெயலாளர் பெருமாள்சாமி நன்றி கூறினார்.
