நல்லாசிரியர் விருது பெற்ற 2 தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு

.தமிழக அரசின் 2023-24ஆம் ஆண்டிற்கான நல்லாசிரியர் விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற கோவில்பட்டியில் உள்ள 2 பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கு ஜே.சி.ஐ சார்பில் பாராட்டு கூட்டம் நடத்தப்பட்டது..
வ. உ. சி. அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு ஜே.சி.ஐ தலைவர் தீபன்ராஜ் தலைமை தாங்கினார். நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ், பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜே.சி.ஐ.செயலாளர் சூர்யா அனைவரையும் வரவேற்றார்.
தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார், தெற்கு கோனார் கோட்டை தமிழ் பாப்திஸ்து தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜையா ஆகியோருக்கு ஜே.சி.ஐ மண்டல தலைவர் மினி பிரியா ராஜேந்திரன் நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.
மண்டல துணைத் தலைவர் ராஜிதப்நெஸ்தார், ஜே.சி.ஐ உறுப்பினர் ஸ்டீபன் நரேஷ்,பள்ளி ஆசிரியர்கள், ஜே.சி.ஐ நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இணை செயலாளர் அருண் பிரசாத் நன்றி கூறினார்.
