• June 7, 2025

Month: August 2023

தூத்துக்குடி

சிறப்பாக பணியாற்றிய 60 காவல்துறையினருக்கு பாராட்டு சான்றிதழ்; ஆட்சியர் வழங்கினார்

தூத்துக்குடியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 77-வது சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவின் போது மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் 60 பேருக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். பாராது பெற்றவர்கள் விவரம் வருமாறு:-‘ தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோடிலிங்கம்,  தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ்,  திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு […]

கோவில்பட்டி

கோவில்பட்டி தொகுதி தி.மு.க. பாக முகவர்கள் கூட்டம்

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி கோவில்பட்டி மத்திய ஒன்றிய தி.மு.க. சார்பில் பாக முகவர்கள் கூட்டம் மத்திய ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சந்தானம்,மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகராஜ்,மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் நாகராஜ்,ஒன்றிய துணைச் செயலாளர்கள் சீனிவாசன், அழகுராஜ், சின்னத்தாய்,மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் செல்வ மணிகண்டன் மாவட்ட பிரதிநிதிகள் அசோக்குமார், முருகன்,மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் […]

கோவில்பட்டி

மதுரை மருத்துவ கல்லூரி பழைய மாணவர்கள்  கோவில்பட்டியில் சந்திப்பு ; வெளிநாடுகளில் இருந்தும்

மதுரை மருத்துவ கல்லூரியில் 1961-ம் ஆண்டு சேர்ந்து படித்த பழைய மாணவர்கள் ஒன்று கூடல் நிகழ்ச்சி கோவில்பட்டியில் 3 நாட்கள் நடைபெற்றது. அங்கோ பிளாசா மற்றும் சவுபாக்யா மகால் ஆகிய இடங்களில் நடந்த இந்த நிகழ்ச்சியில் 33 டாக்டர்கள் கலந்து கொண்டனர். சென்னை, கோவை,மதுரை, நாகர்கோவில், திருநெல்வேலி, திருவனந்தபுரம், பெங்களூரு  மற்றும் லண்டன். அமேரிக்கா ஆகிய இடங்களில் இருந்து டாக்டர்கள் வந்து இருந்தனர், முதல் நாள் நிகழ்ச்சியில் டாக்டர் என்.டி.சீனிவாசன் , கோவில்பட்டியின் சுய விவரத்தையும் சிறப்பையும் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் வேலைவாய்ப்பு முகாம்; 316 பேர் தேர்வாகி பணி நியமன ஆணை பெற்றனர்

கோவில்பட்டி நாடார் மேல்நிலை பள்ளியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடந்த இந்த முகாமில், கோவில்பட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் ,மார்த்தாண்டம், சென்னை உள்ளிட்ட ஊர்களில் இருந்து 95 நிறுவனங்கள், 7 திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு நேர்காணல் நடத்தின. […]

செய்திகள்

அமலாக்க துறை சோதனைக்கு தி.மு. க. பயப்படுவது ஏன்? டி. ஜெயக்குமார் கேள்வி

சென்னை அண்ணாநகரில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அமலாக்கத்துறையை வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகளை சிதறடிக்க பா.ஜ.க.முயற்சி செய்துவருகிறது என்று ஸ்டாலின் பேசியுள்ளாரே என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து டி. ஜெயக்குமார் கூறியதாவது :-நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்.நீங்கள் லஞ்ச ஒழிப்புத்துறையை எங்கள் மீது ஏவி விடுகிறீர்கள்.பொய் வழக்குப் போடுகிறீர்கள்.நாங்கள் இப்படிதான் புலம்பி வருகிறோமா.?,எளியாரை வலியார் அடித்தால்,வலியாரை தெய்வம் அடிக்கும்.இன்றைக்கு பொன்முடி வழக்கு என்ன ஆனது.திமுகவைச் சார்ந்தவர்களே அரசு வழக்கறிஞர்கள். எப்படி வழக்கு நடக்கும்.எங்களைப் பொறுத்தவரையில் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோவில்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சில பகுதிகளில் இன்று திங்கள்கிழமை .(14ந்தேதி ) மின்விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு தடையில்லா சீரான மின் வினியோகம் வழங்குவதற்கு ஏதுவாக பீங்கான் இன்சுலேட்டரை அகற்றிவிட்டு புதிய பாலிமர் இன்சுலேட்டர் மாற்றம் செய்வதற்கும், தொய்வான மின் பாதைகளை சரி செய்வதற்கு புதிய மின் கம்பங்கள் அமைப்பதற்கும், week Jumper களை மாற்றம் செய்வது போன்ற பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கோவில்பட்டி துணை மின் நிலையத்திலிருந்து மார்க்கெட் […]

கோவில்பட்டி

பூவனநாதசுவாமி கோவிலில் பிரதோஷம் சிறப்பு பூஜை

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவிலில் இன்று மாலை பிரதோஷம் சிறப்பு பூஜை நடைபெற்றது. நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீப ஆராதனை நடைபெற்றது.அதை தொடர்ந்து சிவலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கோவில்பட்டி

ஊத்துப்பட்டி அரசுபள்ளியில்உலகயானைகள்தின விழா

நாடு முழுவதும் ஆகஸ்ட் 12ம் தேதி யானைகளை பாதுகாப்பதற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் உலக யானைகள் தின விழா கடைபிடிக்கப்படுகிறது கோவில்பட்டி அருகே ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் யானை முகம் கொண்ட முகமூடி அணிந்து யானைகளை பாதுகாத்திடவும் வாழ்விடங்களை உருவாக்கிடவும், யானைகளுக்கு எதிரான செயல்களை தடுத்து நிறுத்தவும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சக்கு பள்ளி தலைமையாசிரியர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார்.சுற்றுச்சூழல் ஆர்வலர் முத்து முருகன் முன்னிலை வகித்தார்.பள்ளி மாணவி கீதா […]

கோவில்பட்டி

கோவில்பட்டி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் 1008 கஞ்சி கலய ஊர்வலம்

கோவில்பட்டி மந்திதோப்பு ரோட்டில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் ஆடிப்பூர விழா நடைபெற்றது. அதிகாலையில் அன்னை ஆதிபராசக்திக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் மகளிர் 108, 1008 தமிழ் மந்திரங்கள் கூறி குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர்.மன்ற தலைவர் அப்பாசாமி தொடங்கிவைத்தார். தொடர்ந்து உலகம் சமாதானம் வேண்டியும்,  மழைவளம் வேண்டியும், விவசாயம் வளம்பெறவும், வைரஸ் தொற்றுநோய் நோய் நீங்கி, அனைத்து மக்களும்  நலமுடன் வாழவும் அன்னையிடம் வேண்டி மாபெரும் 1008 கஞ்சிக்கலயம், 36 அக்கினிசட்டி, 83 முளைப்பாலிகை […]