• June 8, 2025

கோவில்பட்டியில் வேலைவாய்ப்பு முகாம்; 316 பேர் தேர்வாகி பணி நியமன ஆணை பெற்றனர்

 கோவில்பட்டியில் வேலைவாய்ப்பு முகாம்; 316 பேர் தேர்வாகி பணி நியமன ஆணை பெற்றனர்

கோவில்பட்டி நாடார் மேல்நிலை பள்ளியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடந்த இந்த முகாமில், கோவில்பட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் ,மார்த்தாண்டம், சென்னை உள்ளிட்ட ஊர்களில் இருந்து 95 நிறுவனங்கள், 7 திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு நேர்காணல் நடத்தின.

8-ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரையும் ஐ.டி.ஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மசி, பொறியியல் பட்டதாரிகள் என 2 ஆயிரத்து 89 பேர் கலந்து கொண்டனர். இதில் 994 பேர் பெண்கள், 1,095 பேர் ஆண்கள்.

முகாம் ஏற்பாடுகளை மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி சையத் முகமது, மாவட்ட வேலை வாய்ப்பு உதவி இயக்குனர் பேச்சியம்மாள், மகளிர் திட்ட இயக்குனர் வீரபத்திரன், இணை இயக்குனர் சண்முகசுந்தரம் மற்றும் அலுவலர்கள் சிறப்புடன் செய்து இருந்தனர்.

நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ், ஏற்பாட்டில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், ஒவ்வொரு அறையிலும் இருந்து நேர்காணல் நடத்திய நிறுவனங்களை சேர்ந்தவர்களுக்கு தண்ணீர், உணவு பொட்டலம் போன்றவை வழங்குவதற்கும், நேர்காணல் அறைக்கு தேவையான பெஞ்ச் மற்றும் நாற்காலிகளை கொண்டுவந்து போட்டனர்.

முகாம் நடைபெற்ற பள்ளி வளாகத்தின் முன்பகுதியில் மெகா பேனர் வைக்கப்பட்டு இருந்தது. அதில் முகாமில் பங்கேற்ற நிறுவங்களின் பெயர்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கபட்ட அறைகள் பற்றிய விவரம் குறிப்பிடப்பட்டு இருந்தது.

நேர்காணல் முகாமுக்கு வந்திருந்தவர்கள் தங்கள் பெயர்கள் பதிவு செய்கிறார்கள்.
ஒரு அறையில் நேர்காணலுக்கு வந்தவர்கள்

மேலும் வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் மற்றும் வேலை தேடி வந்தவர்கள் பதிவு செய்வதற்கு தனித்தனி இடம் ஒதுக்கி இருந்தனர். நேர்காணலுக்கு வந்தவர்கள் சிறிதும் தடுமாறாமல் அவர்களுக்கு தேவையான உதவிகளை வேலைவாய்ப்பு அலுவலக பணியாளர்கள் செய்தனர்,.

முகாமில் கோவில்பட்டியில் இருந்து லாயல்மில், கைரா டெக்னாலஜிஸ், எம்.எம்.ஏ. மேட்சஸ் கம்பெனி, தங்கமயில் ஜுவல்லரி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்றன,.

ஒவ்வொரு நிறுவன பிரதிநிகளும் நேர்காணல் நடத்தி ஆட்கள் தேர்வு செய்தனர். நேர்காணலில் மொத்தம் 2,089 பேர் பங்கேற்றனர், இதில் 316 பேர் அங்கேயே பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர், 424 பேர் அடுத்த கட்ட தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்,

நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 316 பேருக்கு அங்கு நடந்த நிகழ்ச்சியின் போது  தூத்துக்குடி மாவட்ட கூடுதல் கலெக்டர் தாக்ரே சுபம் ஞானதேவ்ராவ் , மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆகியோர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பயிற்சி துணை கலெக்டர் பிரபு, , கோவில்பட்டி நகரசபை தலைவர் கருணாநிதி, பஞ்சாயத்து யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *