மதுரை மருத்துவ கல்லூரி பழைய மாணவர்கள் கோவில்பட்டியில் சந்திப்பு ; வெளிநாடுகளில் இருந்தும் வந்தனர்

மதுரை மருத்துவ கல்லூரியில் 1961-ம் ஆண்டு சேர்ந்து படித்த பழைய மாணவர்கள் ஒன்று கூடல் நிகழ்ச்சி கோவில்பட்டியில் 3 நாட்கள் நடைபெற்றது. அங்கோ பிளாசா மற்றும் சவுபாக்யா மகால் ஆகிய இடங்களில் நடந்த இந்த நிகழ்ச்சியில் 33 டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை, கோவை,மதுரை, நாகர்கோவில், திருநெல்வேலி, திருவனந்தபுரம், பெங்களூரு மற்றும் லண்டன். அமேரிக்கா ஆகிய இடங்களில் இருந்து டாக்டர்கள் வந்து இருந்தனர்,
முதல் நாள் நிகழ்ச்சியில் டாக்டர் என்.டி.சீனிவாசன் , கோவில்பட்டியின் சுய விவரத்தையும் சிறப்பையும் பற்றி விவரித்தார். இதய நோய் நிபுணர் டாக்டர் சொக்கலிங்கம், நகைச்சுவையும் இதயமும் என்ற தலைப்பில் பேசினார். பழைய மாணவர்கள் சங்க செயலாளர் டாக்டர் நாகராஜன் நன்றி கூறினார்.
அன்றைய தினம் அனைவரும் கதிரேசன் கோவில் சென்று வேல் முருகனை திரிசித்த்னர்.அடுத்தநாள் செண்பகவல்லி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர், பிறகு எட்டயபுரம் சென்று தேசிய கவி பாரதியார் இல்லம், மணி மண்டபம். முத்துசுவாமி தீட்சிதர் மண்டபம். அமுத கவி உமறுப்புலவர் மண்டபம் சென்று பார்வையிட்டனர்.
இரவில் கோவில்பட்டி சவுபாக்யா மகாலில் யோகா, வானவேடிக்கை, இன்னிசை, வினாடி-வினா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சிகள் நடந்தன.
மூன்றாம் நாள் சவுபாக்யா மல்காளில் நடைபெற்ற கூட்டத்தில் அடுத்த சந்திப்பு நிகழ்ச்சி பற்றி விவாதிக்கப்பட்டு புதுச்சேரியில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது, மதிய உணவுக்கு பிறகு டாக்டர் நண்பர்கள் அனைவரும் பிரியாவிடை பெற்று கிளம்பி சென்றனர்,.
