கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி, நகராட்சி பள்ளியில் சுதந்திர தின விழா

இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. கோவில்பட்டியில் அனைத்து பள்ளிகளிலும், அரசு அலுவலகலகங்களிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது.
கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திரதின விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஏ.பி.கே.பழனிச்செல்வம் தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றினார். உறவின் முறை சங்க செயலாளர் ஜெயபாலன், பள்ளி செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ் வரவேற்று பேசினார். மாணவர் ஹரிகிருஷ்ணன் தமிழ் உரை ஆற்றினார்,. மாணவி கார்த்திகா ஆங்கில உரையாற்றினார். சுதந்திரதின விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
9,10-ம் வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிக்கபட்டது. விழாவில் மாணவ மாணவிகளின் கலை நிகழச்சிகள் நடந்தன. விழா முடிவில் உதவி தலைமை ஆசிரியர் அருணாசலம் நன்றி கூறினார்.
தமிழ் ஆசிரியர் செல்வம், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள் ராம்குமார், சந்திரசேகரன், கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்க உறுப்பினர் மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் பங்களா தெரு நகராட்சி தொடக்கப்பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது. மாணவ மாணவிகளுக்கு நம் நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களை பற்றிய பெருமைகளை கூறி நம் இந்திய தேச ஒற்றுமைக்கு பாடுபடுவோம் என்ற உறுதிமொழி எடுக்கப்பட்டது
இந்த நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் முத்துச்செல்வன் , தலைமை ஆசிரியர் சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர் .அனைவரையும் ரோட்டரி சங்க செயலாளர் சரவணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்ட தலைவர் விநாயகா ரமேஷ் மற்றும் எம்.எஸ்.எஸ்.வி. பாபு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் துணை ஆளுநர் சீனிவாசன், முன்னாள் தலைவர் வீராசாமி, உறுப்பினர்கள் மாரியப்பன் கிருஷ்ணசாமி குணசேகரன் புல்பாண்டியன், மாரிச்சாமி மற்றும் பெற்றோர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
