ஊத்துப்பட்டி அரசுபள்ளியில்உலகயானைகள்தின விழா

நாடு முழுவதும் ஆகஸ்ட் 12ம் தேதி யானைகளை பாதுகாப்பதற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் உலக யானைகள் தின விழா கடைபிடிக்கப்படுகிறது கோவில்பட்டி அருகே ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் யானை முகம் கொண்ட முகமூடி அணிந்து யானைகளை பாதுகாத்திடவும் வாழ்விடங்களை உருவாக்கிடவும், யானைகளுக்கு எதிரான செயல்களை தடுத்து நிறுத்தவும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சக்கு பள்ளி தலைமையாசிரியர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார்.
சுற்றுச்சூழல் ஆர்வலர் முத்து முருகன் முன்னிலை வகித்தார்.
பள்ளி மாணவி கீதா வரவேற்றார்.
தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலகணேசன் உலக யானைகள் தின சிறப்புரையாற்றினார்.
இதில் உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ்குமார் உள்பட பள்ளி மாணவ மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.
பள்ளி மாணவி கிரிஜா நன்றி கூறினார்.
