கோவில்பட்டியில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோவில்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சில பகுதிகளில் இன்று திங்கள்கிழமை .(14ந்தேதி ) மின்விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது மக்களுக்கு தடையில்லா சீரான மின் வினியோகம் வழங்குவதற்கு ஏதுவாக பீங்கான் இன்சுலேட்டரை அகற்றிவிட்டு புதிய பாலிமர் இன்சுலேட்டர் மாற்றம் செய்வதற்கும், தொய்வான மின் பாதைகளை சரி செய்வதற்கு புதிய மின் கம்பங்கள் அமைப்பதற்கும், week Jumper களை மாற்றம் செய்வது போன்ற பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கோவில்பட்டி துணை மின் நிலையத்திலிருந்து மார்க்கெட் ரோடு உயர் அழுத்த மின் தொடர் மூலம் மின்விநியோகம் செய்யப்படும் வேலாயுதபுரம் பிரிவிற்கு உட்பட்ட ஜெயகுரு அரவை மில், புறவழிச் சாலைப் பகுதி, மூப்பன்பட்டி காலனி, வி.எம். எஸ். நகர், ஆஞ்சநேயர் கோயில் பகுதி, ஏழாயிரம்பண்ணை சாலை, சூர்யா கார்டன், தனியார் ஸ்டீல் நிறுவனம் ஆகிய பகுதிகளில் திங்கள் கிழமை(நாளை ) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்விநியோகம் தடைபடும் என கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் காளிமுத்து தெரிவித்து இருக்கிறார்.
