• May 9, 2024

Month: July 2023

செய்திகள்

நடைபயிற்சி: காங்கிரஸ் தலைவர் அழகிரி மயங்கி  விழுந்து காயம்  

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் சொந்த ஊர், கடலுார் மாவட்டம் புவனகிரி அருகில் உள்ள கீரப்பாளையம் திருப்பணிநத்தம் கிராமம் ஆகும். சென்னை நந்தனம் அரசு வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பிலும் அவருக்கு வீடு உள்ளது. சென்னையில் இருக்கும் போது அங்கு அவர் தங்குவார். கடந்த சில நாட்களாக சொந்த ஊரில் கே.எஸ்.அழகிரி, குடும்பத்துடன் தங்கி இருந்தார். சிதம்பரத்தில் அழகிரி குடும்பத்தினர் நடத்தி வரும் கல்லுாரியின் மைதானத்தில், நேற்று காலை அவர் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது, அவருக்கு திடீரென […]

கோவில்பட்டி

அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து கோவில்பட்டியில் பா. ம. க. வினர் சாலை

நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார்.இதை கண்டித்து கோவில்பட்டியில் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் கோவில்பட்டி பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.போராட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் மாடசாமி ,மாநில அமைப்பு செயலாளர் கருப்பசாமி, மாவட்ட அமைப்பு செயலாளர் காளிராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் மகாராஜன், கோவில்பட்டி நகர செயலாளர் கருப்பசாமி,ஒன்றிய செயலாளர் லெனின், மாரிமுத் து உட்பட பலர் […]

கோவில்பட்டி

அரசு பள்ளி ஆசிரியை இடமாற்றத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டம்

கோவில்பட்டி அருகே சிதம்பரம் பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 6 முதல் 10-ம் வகுப்பு வரை வகுப்புகள் செயல்படுகின்றன. 170 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் . இங்கு கோவில்பட்டியைச் சேர்ந்த உஷா ஆங்கில ஆசிரியையாக  பணியாற்றி வந்தார். இவர் தற்போது வில்லிசேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் . இதனை கண்டித்து அப்பள்ளியில் பயிலும் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த […]

செய்திகள்

நெய்வேலியில் தடையை மீறிய அன்புமணி ராமதாஸ் கைது; வன்முறையை தடுக்க போலீஸ் துப்பாக்கி

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் மேல்வளையமாதேவி கிராமத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்களில் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு கால்வாய் வெட்டும் பணி கடந்த இரு நாட்களாக நடைபெற்றது. விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களை 20க்கும் மேற்பட்ட ராட்சத மண் வெட்டும் வாகனங்கள் மூலம் அழித்து கால்வாய் வெட்டுவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நெற்பயிர்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும், […]

கோவில்பட்டி

கோவில்பட்டி ஐ.சி.எம். பள்ளியில் சர்வதேச புலிகள் தின விழா

சர்வதேச புலிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. புலிகளின் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும். கோவில்பட்டியில் சில பள்ளிகளில் இன்று சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்பட்டது. கோவில்பட்டி ஐ.சி.எம். நடுநிலைப்பள்ளி சார்பில் சர்வதேச புலிகள் தின விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் புலி வேடம் அணிந்து புலிகள் வாழ்வதற்கு தேவையான வாழ்விடங்களை உருவாக்கிடவும்,இயற்கை வளங்களையும்,சுற்றுச்சூழலை […]

ஆன்மிகம்

சகல சவுபாக்கியங்களை தரும் ஆடி வெள்ளி வழிபாடு…!

தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. சூரியன் கடகத்தில் சஞ்சரிக்கும் மாதமான ஆடி மாதம் இறைவியை நாடிச்  சென்றவர்களுக்கெல்லாம் கோடி கோடியாய் நற்பலன்கள் கொடுக்கும் மாதமாகக் கருதப்படுகின்றது. காரணம் சந்திரன் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதாகும். ‘ஆடிச் செவ்வாய் தேடிக்குளி’ என்றும், ‘ஆடிப்பட்டம் தேடி விதை’, ‘ஆடிப்பெருக்கு கோடியாய் கிடைக்கும்’ என்பதெல்லாம் முன்னோர் வாக்கு. தமிழ்  மாதத்தில் நான்காவது மாதமான ஆடி, தட்சிணாயன புண்ய காலமாகும். ஆடி மாதம் பிறந்தாலே அனைத்து பண்டிகைகளையும் அழைத்து கொண்டு […]

ஆன்மிகம்

ராமேஸ்வரம் ராமநாதர் கோவில் – அறியவேண்டிய 120 தகவல்கள்

1. ராமேஸ்வரத்தில் உள்ள ஜோதிலிங்கம் வீபீணனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த லிங்கத்தின் பின்புறம் கற்பூர ஆரத்தி காண்பித்தால் முன்புறம் அந்த ஜோதியை விளக்கின் இளஞ்சிவப்பு நிறத்தை அப்படியே காணலாம். 2. ராமேஸ்வரம் கோவிலில் உள்ள அதிகார நந்தி வாகனம், விக்கிரகம், உற்சவர் ஆகிய மூன்று சிறப்புகளையும் பெற்று இருப்பது வேறு கோவில்களில் இல்லாத சிறப்பு. அதிலும் இந்த நந்தி வாகனம் முழுவதும் பொன்னாலானது. 3. பஞ்ச மூர்த்திகள் புறப்பாட்டின் பொழுது நந்தி தேவர், சுவாமிக்குப் புறங்காட்டாமல் சுவாமிக்குப் […]

ஆன்மிகம்

பூஜை செய்யும் போது மணி அடிப்பது ஏன் – வீட்டுபூஜை குறிப்புகள்

பூஜை ஆரம்பிப்பதற்கு முன்னால் மணி அடித்தால், அந்த மணி சப்தம் கேட்டதும் வீட்டில் ஏதாவது துர் தேவதைகள் போன்றவை இருந்தால் அது வெளியே ஓடி விடும். துர்தேவதை போன்ற தீய சக்திகளுக்கு மணி சப்தம் கேட்டால் பயம். அதனால், மணியடித்து அவைகளை விரட்டி விட்டு பூஜையை ஆரம்பிக்கிறோம். ஒவ்வொரு நாளும் ஏன் இப்படி அடிக்க வேண்டும் என்றால், ஓடிப்போன துர்தேவதைகள் இருட்டிய பின் மீண்டும் ஒரு வேளை வந்து விடலாம். தினமும் மணி அடிப்பதால் அந்த மணியோசை, […]

கோவில்பட்டி

கிராம கோவிலில் அம்மன் நகைகள் திருட்டு

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகிலுள்ள ஒட்டநத்தம் கிராமத்தில் அக்கம்மாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று, அம்மன் கழுத்தில் கிடந்த தாலி செயின், கண் மலர், மூக்குத்தி ஆகியவற்றை திருடி சென்று விட்டார்கள். இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா சுப்பிரமணியன் (41) என்பவர் புளியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பெயரில்  சப் இன்ஸ்பெக்டர் சதீஷ் நாராயணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.  இந்த […]

கோவில்பட்டி

சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற கோவில்பட்டி மாணவர்களுக்கு பாராட்டு

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மையத்தில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகள் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 800 பேர் கலந்து கொண்டனர்.மாணவர், மாணவிகளுக்கு தனித்தனியாக \ வயது மற்றும் எடை பிரிவு வாரியாக போட்டிகள் நடந்தன. இதில் கோவில்பட்டி கஸ்தூரிபா பள்ளி, புதுப்பட்டி அரசு தொடக்க பள்ளி, பிருந்தாவன் பள்ளி மற்றும் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த சிலம்ப வீரர்கள் அஸ்வா தற்காப்பு பயிற்சி பள்ளியின் சார்பாக கலந்து கொண்டனர், இந்த போட்டியில் அருண்குமார் , […]