• June 14, 2025

கோவில்பட்டியில் ஆகஸ்டு 12-ந்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

 கோவில்பட்டியில் ஆகஸ்டு 12-ந்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்;ப்பு மற்றும் தொழில்நெறிவழிகாட்டும் மையம், தமிழ்நாடுமாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்தும்  தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளியில் 12.8.2023 காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.

  தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூகநலம் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் மற்றும்  மீன்வளம்–மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார்கள். மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ்   சிறப்புரையாற்ற உள்ளார்.

வேலைவாய்ப்பு முகாமில் தூத்துக்குடி மாவட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட திறன்பயிற்சி நிறுவனங்களும் பங்கேற்க உள்ளனர். இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு முதல் முதுநிலை பட்டதாரி,  B.E, Diploma, Nursing, ITI  படித்தவர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது சுயவிவரம், கல்விச்சான்று, ஆதார் அட்டை ஆகிய நகல்களுடன் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாளில் காலை 9 மணிக்குவந்து பங்கேற்கலாம். மேலும் தனியார்துறை வேலைவாய்ப்பு இணையத்திலும் (www.tnprivatejobs.tn.gov.in) வேலைநாடுநர்கள் மற்றும் தனியார்துறை நிறுவனங்கள் தங்களது விபரங்களை பதிவுசெய்ய வேண்டும். வேலைவாய்ப்புமுகாம் தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிய  Thoothukudi Employment office என்ற Telegram channel-ல் இணையவும். உங்கள் அலைபேசியில் Telegram செயலியை பதிவிறக்கம் செய்யவேண்டும்.

பின்பு Thoothukudi Employment office என search செய்தால்channel தோன்றும். அதன் உள்நுழைந்து Join என்பதனை click செய்துஎளிதில் channel-ல்இணையலாம். மேலும் இந்த சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டால் அவர்களின் வேலைவாய்ப்பு பதிவுமூப்பு ரத்து செய்யப்படமாட்டாது.

மேற்கண்ட தகவல்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *