ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா மீது சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக மசோதா மீது ஒவ்வொரு கட்சிக்கும் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. ஒவ்வொரு கட்சியில் சார்பிலும் எம்.எல்.ஏக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அவர்கள் அனைவரும் மசோதாவிற்கு ஆதரவை தெரிவித்தனர். இதையடுத்து அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம், மசோதாவிற்கு தனது ஆதரவை தெரிவித்தார். இதனை தொடர்ந்து சபாநாயகர் ஓ.பன்னிர்செல்வம் பேச அனுமதி அளித்தார். அப்போது பன்னீர்செல்வம் பேசுகையில், ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு அதிமுக சார்பில் […]
இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். தனியார் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டதன் மூலம் யாஷிகா ஆனந்த் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலம் அடைந்தர். கடந்த 2021- ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கு யாஷிகா ஆனந்த் காரில் வந்து கொண்டிருந்தார். அவரது கார் மாமல்லபுரம் அருகே வந்த போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவரது நண்பர் வள்ளி பவானி செட்டி என்பவர் உயிரிழந்தார். இது […]
பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியர்களை தாக்கியவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கிராம மக்கள்
தூத்துக்குடி மாவட்டம் கீழநம்பிடரம் கிராம ஊர் பொது மக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மனு அளிதத்னர். பின்னர் அவர்கள் கூறியதாவது:- , “எட்டையாபுரம் அருகே கீழநம்பிபுரத்தில் உள்ள இந்து தொடக்கப் பள்ளியில் சுமார் 21 பேர் படித்து வருகிறார்கள். 2 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 21ம் தேதி பாடம் நடந்து கொண்டிருந்தபோது, எங்களது ஊரைச் சார்ந்த முனியசாமி, மாரிச்செல்வி, சிவலிங்கம், செல்வி ஆகிய 4பேர்களும் அத்துமீறி பள்ளிக்குள் […]
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் டி.எம்.பி. மெக்கவாய் பள்ளியில் பயிலும் மாணவிகளை நேற்று மாலை கடந்தை தேன் குளவிகள் கடித்து காயப்படுத்தின, இதனால் ஒட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மாணவிகளை யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் மருத்துவர்களிடம் மாணவிகளுக்கு தேவையான சிகிச்சைகளை விரைந்து அளிக்குமாறு கேட்டுகொண்டார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவியின் உடல்நலம் குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்… இதையடுத்து ஒட்டப்பிடாரம் மெக்கவாய் பள்ளிக்கு நேரில் சென்று […]
கோவில்பட்டி அப்பனேரி வெங்கடேஸ்வரா கார்டனில் பூட்டிய வீட்டின் கதவு உடைப்பு;மோட்டார் சைக்கிள் திருடிய
கோவில்பட்டி அருகே அப்பனேரி பஞ்சாயத்து வெங்கடேஸ்வரா கார்டன் வேகமாக முன்னேறி வரும் பகுதி. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நிறைய வீடுகளின் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இந்த பகுதியில் இன்று அதிகாலை 2 மணி அளவில் ஒரு கொள்ளையன் புகுந்து தனது கைவரிசையை காட்டி உள்ளான். பிரதான தெருவில், ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சீனிவாசன் என்பவர் தனது வீட்டை பூட்டி விட்டு பெங்களுருவில் வசிக்கும் மகள் வீட்டுக்கு சென்று இருந்தார். இந்த […]
கேரளாவில் டெலிவிஷன் சீரியல்களில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஆர்யா பார்வதி. இவருடைய தாயார் தீப்தி சங்கர். 47 வயதாகும் தீப்தி சங்கருக்கு சமீபத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இதுதொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானது. அதை தொடர்ந்து நடிகை ஆர்யாவின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மகள் நடிகையாக கலக்கி வரும் நிலையில், அவரது தாயாருக்கு குழந்தை பிறந்தது குறித்து பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து இருந்தனர். ஆனால் நடிகை ஆர்யா பார்வதி எந்த பதிலையும் தெரிவிக்காமல் இருந்து […]
கேரளாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து உள்ளது. திருச்சூரில் கொரோனாவால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் இன்று 210 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஐசியூ மற்றும் வென்டிலேட்டர் அமைப்புகளை தயார் செய்ய சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். மேலும் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு பொது இடங்களில் இன்று முதல் முகக்கவசம் அணிவது […]
கோவில்பட்டி ராஜீவ் நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் சிவந்தி நாராயணன். இவர் பா.ஜனதா பட்டியலின அணியின் மாநில செயலாளராக இருந்து வருகிறார். இவர் கடந்த 20 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். சென்னையில் இருந்து கார் மூலம் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழுவினர் கோவில்பட்டியில் உள்ள சிவந்தி நாராயணன் வீட்டில் இன்று காலை 7 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர். இதையொட்டி அவரது வீட்டு முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. […]
கோவில்பட்டி வீரவாஞ்சி நகரில் சுந்தர்ராஜ் என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலை உள்ளது.. இன்று காலையில் வழக்கம் போல் தொழிற்சாலையை திறப்பதற்காக ஊழியர் ஒருவர் அங்கு சென்றார். தொழிற்சாலை கதவை திறந்து உள்ளே சென்றபோது தீக்குச்சிகள் இருப்பு வைக்கப்பட்டிருந்த அறையில் மின் கசிவு காரணமாக தீப்பொறி விழுந்து நெருப்பும், புகையும் மளமளவென பிற பகுதிகளுக்கும் பரவியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஒரு சில நிமிடங்களில் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமானது. இதனால் அந்த பகுதி மக்கள் பீதி […]
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடந்த 15 ம் தேதி நெஞ்சு வலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. லேசான கொரோனா தொற்றுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. கொரோனா பாதிப்புடன் நுரையீரல் பாதிப்பும் கண்டறியப்பட்டதால் ,செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு செயற்கை ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை […]