• June 7, 2025

கடந்தை தேன் குளவிகள் கடித்த மாணவிகளுக்கு சிகிச்சை;யூனியன்  தலைவர் நேரில் ஆறுதல்

 கடந்தை தேன் குளவிகள் கடித்த மாணவிகளுக்கு சிகிச்சை;யூனியன்  தலைவர் நேரில் ஆறுதல்

தூத்துக்குடி மாவட்டம்  ஒட்டப்பிடாரம் டி.எம்.பி. மெக்கவாய் பள்ளியில் பயிலும் மாணவிகளை நேற்று மாலை கடந்தை தேன் குளவிகள் கடித்து காயப்படுத்தின,

இதனால் ஒட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மாணவிகளை யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் நேரில்  சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும் மருத்துவர்களிடம் மாணவிகளுக்கு தேவையான சிகிச்சைகளை விரைந்து அளிக்குமாறு கேட்டுகொண்டார்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவியின் உடல்நலம் குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்…

இதையடுத்து ஒட்டப்பிடாரம் மெக்கவாய் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பள்ளி மாணவ மாணவிகளின் பாதுகாப்பில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் பள்ளி வளாகத்தை தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் வைத்துகொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்குமாறு பள்ளி நிர்வாகத்திடம் வலியுறுத்தினார்..

யூனியன் ஆணையாளர் திரு.சிவபாலன், வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி, ஒன்றிய கவுன்சிலர் தசுகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்…

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *