பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியர்களை தாக்கியவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டம் கீழநம்பிடரம் கிராம ஊர் பொது மக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மனு அளிதத்னர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-
, “எட்டையாபுரம் அருகே கீழநம்பிபுரத்தில் உள்ள இந்து தொடக்கப் பள்ளியில் சுமார் 21 பேர் படித்து வருகிறார்கள். 2 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த 21ம் தேதி பாடம் நடந்து கொண்டிருந்தபோது, எங்களது ஊரைச் சார்ந்த முனியசாமி, மாரிச்செல்வி, சிவலிங்கம், செல்வி ஆகிய 4பேர்களும் அத்துமீறி பள்ளிக்குள் உள்ளே நுழைந்து அங்கு பணிபுரியும் தலைமை ஆசிரியை குருவம்மாள் மற்றும் இடைநிலை ஆசிரியர் பாரத் ஆகியோரை ஓட ஓட விரட்டி அடித்து, கெட்ட வார்த்தைகளால் திட்டி அவர்களை கொலை செய்து விடுவதாக மிரட்டிச் சென்றுள்ளனர்.
இது சம்பந்தமாக எட்டையாபுரம் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்த பிறகு குற்றவாளிகள் 4 பேரையும் கைது செய்த காவல் துறையினர் இறுதியில் 3 பேரை மட்டும் ரிமாண்ட் செய்தனர். இந்த பிரச்சனைக்கு மூல காரணமான மாரிச்செல்வி என்பவரை முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளும்படி காவல் நிலையத்தில் இருந்து அனுப்பி விட்டனர்.
மேற்கண்ட குற்றவாளிகளால் பள்ளியில் பணிபுரிகின்ற ஆசிரியர் பெருமக்களுக்கும், அங்கு படிக்கின்ற எங்களது குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது.
மேலும், முனியசாமி என்பவர் மீது பல வழக்குகள் உள்ளது. இப்படிப்பட்ட நுபர் பள்ளிக் கூடத்திற்குள் கூலிப் படைகளை அனுப்பி தாக்குதல் நடத்த வாய்ப்புகள் உள்ளது. இதனால் எங்களது பிள்ளைகளை பள்ளிக்கூடம் அனுப்ப அச்சமாக உள்ளது.
ஆகையால் மேற்கண்ட குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தால் மட்டுமே இனிவரும் காலங்களில் ஆசிரியர் களுக்கும், குழந்தைகக்கும் பாதுகாப்பு கிடைக்கும். அதுவரை எங்களது குழந்தைகளை பள்ளிக்கூடம் செல்ல அனுமதிக்க இயலாத நிலை உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
