கோவில்பட்டியில் பா.ஜனதா மாநில நிர்வாகி வீட்டில் அமலாக்க பிரிவு அதிகாரிகள் சோதனை

கோவில்பட்டி ராஜீவ் நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் சிவந்தி நாராயணன். இவர் பா.ஜனதா பட்டியலின அணியின் மாநில செயலாளராக இருந்து வருகிறார். இவர் கடந்த 20 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
சென்னையில் இருந்து கார் மூலம் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழுவினர் கோவில்பட்டியில் உள்ள சிவந்தி நாராயணன் வீட்டில் இன்று காலை 7 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர்.
இதையொட்டி அவரது வீட்டு முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனிடையே சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் வீடு முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினார்கள்.
சிவந்தி நாராயணன் மத்திய அரசின் திட்டங்கள் பலவற்றில் அவரது பணி இருந்து வருகிறது.. வட மாநிலங்களில் தான் அவர் அதிக நாட்கள் தங்கி இருப்பார் என்று சொல்லப்படுகிறது.
இன்றைய அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனையின் போது சிவந்தி நாராயணன் வீட்டில் இருந்தார்,. அவரிடம் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணை விவரம் வீடியோ பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை மதியமும் தொடர்ந்து நீடித்தது.
