கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் தீவிபத்து

கோவில்பட்டி வீரவாஞ்சி நகரில் சுந்தர்ராஜ் என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலை உள்ளது.. இன்று காலையில் வழக்கம் போல் தொழிற்சாலையை திறப்பதற்காக ஊழியர் ஒருவர் அங்கு சென்றார்.
தொழிற்சாலை கதவை திறந்து உள்ளே சென்றபோது தீக்குச்சிகள் இருப்பு வைக்கப்பட்டிருந்த அறையில் மின் கசிவு காரணமாக தீப்பொறி விழுந்து நெருப்பும், புகையும் மளமளவென பிற பகுதிகளுக்கும் பரவியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
ஒரு சில நிமிடங்களில் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமானது. இதனால் அந்த பகுதி மக்கள் பீதி அடைந்தனர். இது பற்றி தகவலறிந்த கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தீ விபத்தில் உள்ளே இருந்த தீக்குச்சிகள் மற்றும் தீக்குச்சிகள் அடைக்கும் பெட்டிகள் எந்திரங்கள், மின் சாதன பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. நல்ல வேலையாக தொழிலாளர்கள் யாரும் இல்லாதததால் உயரிழப்பு தவிர்க்கப்பட்டது.
.தீவிபத்து தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
