தென் மண்டல அளவிலான 18 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் கிராஸ் ரூட் ஆக்கி போட்டி மார்ச் 19 முதல் 26 ஆம் தேதி வரை ராமநாதபுரம் வேலு மாணிக்கம் செயற்கை புல் ஆக்கி மைதானத்தில் நடக்க இருக்கிறது இப்போட்டியில் தமிழக அணியில் விளையாடுவதற்கு கோவில்பட்டி வீரர்கள் ராமநாதன் ,வேல் ராகவன், இன்பராஜ், சுகுமார் ஆகிய 4 வீரர்கள் தேர்வாகியுள்ளனர் தமிழக ஆக்கி அணிக்கு பயிற்சியாளராக கோவில்பட்டி ஆக்கி பயிற்சியாளர் அரவிந்தன் தேர்வாகி பயிற்சி அளித்து […]
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன்பிடித் தொழில் நுட்பவியல் மற்றும் மீன்வளப் பொறியியல் துறையும் கன்னியாகுமரி மாவட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி அலுவலகமும் இணைந்து சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின், சங்கல்ப் திட்ட நிதியுதவியுடன் நடத்தும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கான மீன்பிடிப்படகு என்ஜின் பராமரிப்பு மற்றும் கடலில் மீனவர்களின் பாதுகாப்பு” என்ற ஒரு வாரகால உள்வளாகப் பயிற்சி நேற்று (14.3.2023 […]
நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ள நிலையில், கடந்த முறை நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் 4 வார்டுகளில் அ.தி.மு.க.வும், மற்ற 51 வார்டுகளில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்றன. இதையடுத்து தி.மு.க. பெரும்பான்மை வெற்றியோடு மாநகராட்சியை கைப்பற்றி, நெல்லை மாநகராட்சியின் மேயராக சரவணன் பதவியேற்றார். இதனிடையே நீண்ட நாட்களாக தொடரும் பல்வேறு சிக்கல்கள் குறித்து மாநகராட்சி மேயர் மீது தி.மு.க. கவுன்சிலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். நெல்லை மாநகராட்சி பணிகளில் பல்வேறு முறைகேடுகள் […]
காவல்துறையினரின் வாரிசுகளுக்கு சிறப்பு கல்வி உதவித்தொகை; மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்
தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றி வரும் காவல்துறையினர் மற்றும் காவல் அமைச்சுப்பணியாளர்களின் வாரிசுகளில் மேல்நிலைபள்ளிப்படிப்பில் மாநில அளவில் முதல் 100 இடங்களை பிடித்துள்ளவர்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்து, அவர்களின் உயர் கல்விக்கு படிப்பு முடியும் வரை ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவித் தொகையாக ரூ. 25,000/- வரை வழங்கப்படுகிறது. அதன்படி 2021 – 2022ம் கல்வி ஆண்டில் மாநில அளவில் முதல் 100 இடங்களை பிடித்த காவல்துறையில் பணியாற்றி வரும் காவல்துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்களின் […]
தொழிலாளர்கள் குறைந்தபட்ச ஊதிய பட்டியலை வெளியிட வேண்டும்; அமைச்சரிடம் கோவில்பட்டி தீப்பெட்டி உற்பத்தியாளர்கள்
சென்னை தலைமைச் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ கணேசனை கோவில்பட்டி தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் சந்தித்து பேசினார்கள். அமைச்சரிடம் கோரிக்கை மனு வழங்கிய அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தீப்பெட்டி தொழிலாளர் நலவாரிய குழு கூட்டத்தில் சீன நாட்டு சிகரெட் லைட்டரை தடை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் மூலமாக தமிழகத்தில் சட்டவிரோதமாக விற்கப்படுகின்ற ஒரு முறை பயன்படுத்தக்கூடிய சீனா பிளாஸ்டிக் லைட்டரை பறிமுதல் செய்வதற்கு தனி குழு அமைத்ததற்கு தீப்பெட்டி […]
தென்காசி மாவட்டம், சின்ன வாகைக்குளம் பகுதியை சேர்ந்த பால்சாமி மகன் அலெக்சாண்டர் (வயது 37) என்பவர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் புதூரில் உள்ள ஆதி திராவிடர் அரசு மாணவர் விடுதியில் காப்பாளராக பணிபுரிந்து வந்தார். .இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் அந்தியூர் பகுதியை சேர்ந்த விஜயன் மகன் அன்பு (31) மற்றும் அவரது நண்பரான வினோத் ஆகிய இருவரிடமும் அறிமுகமாகி அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி நம்பிக்கை ஏற்படுத்தி அவர்களிடமிருந்து மொத்தம் ரூ 11,28,500/- […]
கோவில்பட்டியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றக்கோரி சமூக ஆர்வலர்கள் கண்களை மறைத்தபடி மனு
கோவில்பட்டி கோட்டாட்சியரை சமூக ஆர்வலர்கள் ராமகிருஷ்ணன், மாரிமுத்து, ராமகிருஷ்ணன், ராஜெசுகண்ணன், முருகன் ஆகியோர் இன்று சந்தித்தனர். கண்களை மறைத்தபடி இருந்த அவர்கள் பொதுமக்கள் சார்பாக கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறி இருந்ததாவது:- கோவில்பட்டி நெடுஞ்சாலை துறைக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையின் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்பு தலைவிரித்து ஆடிக்கொண்டு இருக்கிறது. கித்து பொதுமக்கள் நடந்து செல்வதற்கும் வாகனங்கள் செல்வதற்கும் மிகுந்த இடையூறாக இருப்பதுடன் போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்துகிறது. இது சம்பந்தமாக பலமுறை புகார் அளித்தும் இதுவரை […]
சென்னை டி.ஏ.வி.கல்வி குழுமத்துடன் கோவில்பட்டி புனித ஓம் குளோபல் பள்ளி புரிந்துணர்வு ஒப்பந்தம்
சென்னையில் உள்ள டி.ஏ.வி. கல்வி குழுமத்திற்கும் கோவில்பட்டி புனித ஓம் குளோபல் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இடையேயான கற்றல் மற்றும் கலைத்திறமைகளை மேம்படுத்துதல், நற்பண்பை வளர்க்கும் கல்வி, கே=மருத்துவம், பொறியியல் போன்ற போட்டி தேர்வுகளில் சிறந்து விளங்குவதற்கு தேவையான அனைத்து பயிற்சிகளும் வழங்கப்படுவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.’ வரும் கல்வி ஆண்டு முதல் இதன் தொடர்பாக அணைத்து நிகழ்வுகளும்நடைபெற உள்ளது. இந்த ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் சென்னை டி.ஏ.வி.கல்விகுளுமத்தின் சார்பாக மல்லிகா ஸ்ரீதர், டாக்டர் பி.ரவி, நந்தகுமார் […]
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில குழு கூட்டம் கோவில்பட்டியில் நடந்தது. மாநில தலைவர் பி. சண்முகம் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சாமி நடராஜன், துணை தலைவர் டி. ரவீந்திரன், பொருளாளர் கே. பி. பெருமாள், மாவட்ட தலைவர் ஆர். ராகவன், மாவட்ட செயலாளர் புவி ராஜ், பொருளாளர் நம்பிராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில், வருகிற ஏப்ரல் 5-ந்தேதி மத்திய அரசின் விவசாய தொழிலாளர் விரோத கொள்கைகளை முறியடிக்க, டெல்லியில் நடைபெற உள்ள விவசாய […]
கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் கிராமத்தில் உள்ள கண்மாயில் கிராம மக்கள் சார்பில் மீன் குஞ்சுகள் வாங்கி விடப்பட்டன. தற்போது மீன்கள் நன்கு வளர்ந்து இருந்த நிலையில் நேற்று மீன்பிடி திருவிழா நடந்தது. இதில் கிராம மக்கள் குடும்பத்தினருடன் கண்மாயில் இறங்கி மீன்வலை, மரக்கூடை, பிளாஸ்டிக் டிரம் ஆகியவற்றை கொண்டு மீன்களை பிடித்தனர். சிலரது வலையில் சிறிய வகையிலான விரால், கட்லா, கெழுத்தி, கெண்டை, அயிரை, உளுவை உள்ளிட்ட பலவகை மீன்கள் சிக்கின. சிலரது வலையில் 5 கிலோ […]