• June 7, 2025

Month: February 2023

கோவில்பட்டி

கோவில்பட்டியில் தொடரும் அவலம்: கூடுதல் பஸ் நிலையத்தை புறக்கணிக்கும் பஸ் டிரைவர்கள்; பாலத்தில் 

கோவில்பட்டி நகருக்குள் நெருக்கடியை குறைக்கும் வகையில் பைபாஸ் சாலையில் கூடுதல் பஸ் நிலையம் உருவாக்கபப்பட்டது. இந்த கூடுதல் பஸ் நிலையம் கடந்த 2007ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த தற்போதைய தமிழக முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கூடுதல் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்ட சில மாதங்களில் நிறுத்தப்பட்டது. வழக்கம் போல அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து தான் பேருந்துகள் புறப்பட்டு […]

கோவில்பட்டி

மன நலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா நாகலாபுரத்தில் ரோட்டோரத்தில் மன நலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஆதரவற்ற நிலையில் இருப்பதாக தகவல் அறிந்து மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன் மற்றும் மாவட்ட மன நல திட்ட மருத்துவர் நிரஞ்சனா தேவி ஆகியோரின்  ஆலோசனையின் பேரில் கோவில்பட்டி ஆக்டிவ் மைண்ட்ஸ் மீட்பு குழுவினர் நேரில் சென்றனர். அவர்களுடன் நாகலாபுரம் காவல் நிலைய காவலர்கள் சிங்கராஜ்,முத்து வைரம் , தேனம்மாள் முதியோர் இல்ல மேலாளர் சேகர் ஆக்டிவ் மைண்ட் […]

செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதியில்  நிலவரி ரத்து செய்தது தேர்தல் விதிமீறல்; டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி: இடைத்தேர்தலில் த.மா.கா.விற்கு சீட் கொடுக்காமல் கூட்டணி தர்மத்தை மீறுவதாக கே.எஸ்.அழகிரி கூறுகிறாரே? பதில்: எங்களது விருப்பத்தை தெரிவித்தோம். கூட்டணியினரும் ஏற்றுக்கொண்டார்கள். எங்களுக்கு தைரியம் இருக்கிறது நிற்கிறோம்.  ஆனால் ஓ.பி.எஸ்.க்கு முன்மொழிய யாருமே இல்லை. தினகரனுக்கு தேர்தல் என்றாலே பயம் ஏற்பட்டுவிடுகிறது. மேலும் இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. நிற்கிறது. அதனால் […]

தூத்துக்குடி

தூத்துக்குடி மண்டலத்தில் 4 நெல் சேமிப்பு தளங்கள் திறப்பு

தமிழ்நாடு முதல்-அமைச்சர்  மு.க. ஸ்டாலின் இன்று சனிக்கிழமை (பிப்.11) சென்னை தலைமைச் செயலகத்தில்,  கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் 105.08 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,42,450 மெட்ரிக் டன் கொள்ளளவில் மேற்கூரையுடன் அமைக்கப்பட்டுள்ள 106 நவீன நெல் சேமிப்புத் தளங்களைத் திறந்து வைத்தார். மேலும், 54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 28,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 12 புதிய வட்ட செயல்முறைக் கிடங்குகள் அமைக்கும் பணிக்கு அடிக்கல் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி தினசரி சந்தைக்கு செல்லும் ஓடைபாலத்தில் சரிந்த லாரி;  போக்குவரத்து பாதிப்பு

கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தையின் பிரதான நுழைவு வாசல் மார்க்கெட் ரோட்டில் உள்ளது. இன்னொரு வாசல் மெயின்ரோட்டில் ராமசாமி பழைய ராமசாமி தியேட்டர் செல்லக்கூடிய ஓடை பாலம் தாண்டி உள்ளது,. இந்த நுழைவு வாசல் வழியாக இரு சக்கர வாகனம் மட்டும்தான் செல்லமுடியும். லாரிகளில் வாரும் சரக்குகள் இந்த வாசலுக்கு முன்பாக நிறுத்தி அங்கிருந்து சரக்குகள் இறக்குவது வழக்கும். இதனால் இந்த பாதை காலை நேரத்தில் மிகுந்த நெருக்கடியில் சிக்கி தவிக்கும், இன்று பகலில் வழக்கம் போல் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி தினசரி சந்தை அதே இடத்தில் தொடரக்கோரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பா.ஜனதா

கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தை அதே இடத்தில் தொடரவேண்டும், ஒதுக்கப்பட்ட நிதியில் கூடுதலாக மொத்த தினசரி சந்தையை  போக்குவரத்துக்கு  இடையூறு இல்லாத இடத்தில் அமைக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ஜனதா சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரப்பட்டது. இதற்கு அனுமதி மறுக்கபட்டதால் இன்று மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து காத்திருக்கும்  போராட்டத்தில் ஈடுபட்டனர், பா.ஜனதா நகரத் தலைவர் போலீஸ் சீனிவாசன் தலைமையில் மாவட்ட பொதுச் செயலாளர் […]

செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து கமல்ஹாசன் 3 நாட்கள் பிரசாரம்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்ததை தொடர்ந்து இத்தொகுதிக்கு வருகிற 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர், இதில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ‘கை’ சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என அறிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான […]

கோவில்பட்டி

18 வயதுக்கு கீழ் உள்ள மாணவர்கள், இரு சக்கர வாகனம் ஓட்டினால் ரூ.25

கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அதிகாரி நெடுஞ்செழிய பாண்டியன் நேற்று மாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது வாகனம் இயக்குவதற்கான பெர்மிட், தகுதி சான்று, இன்சூரன்ஸ், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இயக்கிய லாரியை பறிமுதல் செய்தார். இதற்கு ரூ.22 ஆயிரம் அபராதம் விதித்தார். இதேபோல் சாலை வரி செலுத்தாமலும், தகுதி சான்று, இன்சூரன்ஸ், ஓட்டுனர் உரிமம் இல்லாமலும் இயக்கிய 3 சக்கர சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து சாலை வரி ரூ.12 ஆயிரம், மற்றும் அபராதம் ரூ.12,500 விதித்தார். […]

செய்திகள்

ஈரோடு அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்துக்கு மக்களை வரவிடாமல் பிரியாணி, பணம் கொடுத்து

சென்னை தலைமைச்செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று புகார் மனு அளித்தார். பின்னர் பத்திரிகையாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:யின்போது கூறியதாவது:-‘ – ஈரோட்டில் அ.தி.முக. வேட்பாளர் அறிமுக கூட்டம் 9-ந் தேதி நடைபெற்றது. அந்த கூட்டத்துக்கு மக்கள் அதிகமாக சென்றுவிடக்கூடாது என்பதற்காக தி.மு.க.வினர் ஆங்காங்கே சட்டவிரோதமாக பந்தல் போட்டு, பிரியாணி மற்றும் 1000 ரூபாய் கொடுத்து ஏழை எளிய மக்களை கூட்டத்துக்கு வரவிடாமல் தடுத்துவிட்டனர். திருமங்கலம் பார்முலாவை இந்த […]

செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 77 பேர் போட்டி; வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு  

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்ததை தொடர்ந்து இத்தொகுதிக்கு வருகிற 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாகல் கடந்த 31-ந்தேதி தொடங்கி 7-ந்தேதி வரை நடந்தது. இதில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தே.மு.தி.க. சார்பில் சிவபிரசாந்த் உள்பட 96 பேர் 121 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இதையடுத்து வேட்பு மனுக்கள் மீதான […]