கோவில்பட்டியில் தொடரும் அவலம்: கூடுதல் பஸ் நிலையத்தை புறக்கணிக்கும் பஸ் டிரைவர்கள்; பாலத்தில் பயணிகளை இறக்கி விடும் கொடுமை நீங்குவது எப்போது:

கோவில்பட்டி நகருக்குள் நெருக்கடியை குறைக்கும் வகையில் பைபாஸ் சாலையில் கூடுதல் பஸ் நிலையம் உருவாக்கபப்பட்டது. இந்த கூடுதல் பஸ் நிலையம் கடந்த 2007ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
அப்போது தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த தற்போதைய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கூடுதல் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்ட சில மாதங்களில் நிறுத்தப்பட்டது.
வழக்கம் போல அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து தான் பேருந்துகள் புறப்பட்டு செல்கின்றன,. கூடுதல் பஸ்நிலையம் செயல்பட நீதிமன்றத்தில் வழக்கு உள்ளிட்ட காரணங்களினால் பஸ் நிலையம் செயல்படாமல் இருந்தது.
இடையில் அண்ணா பஸ் நிலையம் பராமரிப்பு காரணமாக இயங்காமல் இருந்தபோது சுமார் 20 மாதங்கள் கூடுதல் பஸ் நிலையத்தில் இருந்து அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டன. அதன் பின்னர் கூடுதல் பஸ் நிலையம் நீண்டதூர வெளியூர் பஸ்கள் மட்டும் நிறுத்தப்பட்டு வருகின்றன,
அதுவும் பஸ் நிலையத்த்துக்குள் பஸ்கள் செல்வது கிடையாது. வெளியே பஸ்கள் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றியும், இறக்கியும் செல்கின்றன,
இதன் காரணமாக பஸ் நிலையம் உள்புறம் வெறிச்சோடி காணப்படும். வெளியே மழை, வெயில் என்று பயணிகள் பலவேறு சிரமங்களை அனுபவித்து பஸ் பயணம் மேற்கொள்கின்றனர். இரவு நேரத்தில் பாதுகாப்பற்ற நிலை நிலவுகிறது. நள்ளிரவுக்கு மேல் வரும் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பஸ்கள் பஸ் நிலையம் இருக்கும் சர்வீஸ் ரோட்டுக்கு கூட வருவது கிடையாது.
நான்குவழி சாலையில் மேம்பால இறக்கத்தில் பஸ்மேம்பால இறக்கத்தில் பஸ்சை நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டு செல்லும் அவலநிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

டிரைவர்கள் இறக்கிவிடும் இடத்தில் இருந்து சர்வீஸ் சாலைக்கு வரவேண்டுமானால் நீண்டதூரம் நடந்து வந்து திரும்பவேண்டும்,. அல்லது பாலத்தில் இருந்து சுமார் 10 அடி உயரம் குதிக்க வேண்டும். இளைஞர்களை தவிர்த்து முதியோர் சிரமப்பட்டு சர்வீஸ் சாலைக்கு வந்து ஆட்டோ பிடித்து தங்கள் வீடுகளுக்கு செல்கிறார்கள்.
இந்த கொடுமை சில சமயங்களில் காலை நேரத்திலும் நடக்கிறது. இது பற்றி அதிகாரிகள் பார்வைக்கு பாலமுறை எடுத்து சென்றும் கூட இந்த அவல நிலை தொடர்ந்து வருகிறது.
கூடுதல் பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர் பஸ்கள் இயக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்தார். மேலும் இரு பஸ் நிலையங்களுக்கு இடையே அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படும் , என்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்து இருந்தார். அறிவிப்பு வெளியாகி ஒருவருடத்துக்கு மேல் ஆகிவிட்டது. இன்னமும் கூடுதல் பஸ் நிலையம் செயல்படவில்லை.
இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பு கூடுதல் பஸ் நிலையத்துக்குள் அனைத்து பஸ்களும் சென்று வரவேண்டும் என்று ஆட்சியர் உத்தரவு பிறப்பித்து ஒரு மாதம் வரை அமலில் இருந்தது. போலீசார் கண்காணிப்புடன் பஸ்கள் , பஸ் நிலையத்துக்குள் சென்று பயணிகளை ஏற்றியும் இறக்கியும் சென்றன. பின்னர் அதுவும் காலாவதியாகி விட்டது. பழைய நிலைக்கே வந்து விட்டது.
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று ஒரு சினிமா பாடல் வரும்.அதுபோல் மக்கள் சேவையாற்றும் பஸ் டிரைவர்கள் திருந்தி சரியான முறையில் கடமையாற்றினால் இதுபோன்ற அவலம் நடக்காது. மக்களும் மனமுவந்து பாராட்டுவார்கள்…!

